உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக முன்னிலை

உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், 3ம் சுற்று முடிவில் பா.ஜ., வேட்பாளர் சந்திர பானு பஸ்வான் 17,123 ஓட்டுக்கள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் சட்டசபை தொகுதிக்கு பிப்.,5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 64.02 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இந்த தேர்தலில், பா.ஜ., சார்பில் சந்திரபானு பஸ்வான், சமாஜ்வாதி சார்பில், அஜித் பிரசாத் உட்பட 10 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

ஆனால் அனைவரது கவனமும், பா.ஜ., மற்றும் சமாஜ்வாதி வேட்பாளர்கள் மீது தான் இருந்தது. இந்த தொகுதியில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி இன்று (பிப்.,08) காலை 8 மணி துவங்கி நடந்து வருகிறது.

மொத்தம் 30 சுற்றுகளாக ஓட்டுக்கள் எண்ணப்பட உள்ளன. முதல் சுற்று முடிவில் பா.ஜ., வேட்பாளர் சந்திர பானு பஸ்வான் 17,123 ஓட்டுக்கள் பெற்று முன்னிலையில் உள்ளார். 2ம் இடத்தில் உள்ள சமாஜ்வாதி வேட்பாளர் 7 ஆயிரம் ஓட்டுக்கள் பெற்றுள்ளார்.

முதல் இடத்தில் இருக்கும் பா.ஜ., வேட்பாளர், 2ம் இடத்தில் உள்ள சமாஜ்வாதி வேட்பாளரை விட 10,123 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

இந்த தொகுதி, அயோத்தி பார்லிமென்ட் தொகுதிக்கு உட்பட்டதாகும். அயோத்தி பார்லிமென்ட் தொகுதியில், கடந்த லோக்சபா தேர்தலில் சமாஜ்வாதிவேட்பாளர் அவதேஷ் பிரசாத் வெற்றி பெற்றார். அவரது மகனைத் தான் இந்த தேர்தலில் சமாஜ்வாதி களம் இறக்கியது.

கடந்த சட்டசபை தேர்தலில் இந்த தொகுதி சமாஜ்வாதியின் அவதேஷ் பிரசாத் வெற்றி பெற்ற தொகுதியாகும். அவர் கடந்த லோக்சபா தேர்தலில் சமாஜ்வாதி சார்பில், அயோத்தி உள்ளடங்கிய பைசாபாத் எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். அதன் தொடர்ச்சியாகவே இந்த இடைத் தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“திருவனந்தபுரத்தில் பாஜக பெற் ...

“திருவனந்தபுரத்தில் பாஜக பெற்ற வெற்றி சாதாரணமானது அல்ல..” – பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக தாம்பரம் வரை இயக்கப்படும் ...

பிரதமர் மோடியை சிலிர்க்கவைத்த ...

பிரதமர் மோடியை சிலிர்க்கவைத்த சிறுமியின் கைவண்ணம் பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த ஒரு சிறுமியின் கையில் இருந்த ஓவியத்தை ...

மாறாதது இனி மாறும் – பிரதமர் ம ...

மாறாதது இனி மாறும் – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி நேற்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ...

சிக்‌ஷாபத்ரி த்விஷாதப்தி பெரு ...

சிக்‌ஷாபத்ரி த்விஷாதப்தி பெருவிழாவில் பிரதமர் நரேந்திரயின்  மோடி உரை சிக்‌ஷாபத்ரி த்விஷாதப்தி பெருவிழாவில் காணொலிக்காட்சி மூலம் இன்று நிகழ்த்திய ...

நான் கட்சித் தொண்டன். இவா்தான் ...

நான் கட்சித் தொண்டன். இவா்தான் என்  தலைவா் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் 1980-ஆம் ஆண்டு, ஜனதா ...

தேசியஜனநாயக கூட்டணியில் மீண்ட ...

தேசியஜனநாயக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரன் அதிமுக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரனின் ...

மருத்துவ செய்திகள்

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...