தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
தைப்பூச திருவிழா தமிழகத்தில், முருகனின் அறுபடை வீடுகள் மற்றும் அனைத்து பகுதிகளிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில்களில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தைப்பூசத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ‘எக்ஸ்’ சமூக வலை தளத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது: அனைவருக்கும் தைப்பூச வாழ்த்துகள். முருகன் நமக்கு வலிமை, செழிப்பு மற்றும் ஞானத்தை வழங்கட்டும். இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றிக்காக பிரார்த்திக்கிறேன். இந்த நாள் நம் வாழ்வில் அமைதயையும் நேர்மறையையும் கொண்டு வரட்டும்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |