பிரான்ஸ் அதிபர் அளித்த விருந்தில் பிரதமர் மோடி மகிழ்ச்சி

பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான், அமெரிக்க துணை அதிபர் ஜேடி வேன்ஸ் ஆகியோரை சந்தித்தார்.

3 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி பாரிஸ் சென்றார். அங்கு விமான நிலையத்தில் திரண்ட இந்திய வம்சாவளியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமரை பார்த்ததும் ‘ மோடி, மோடி’ எனவும், ‘ பாரத மாதாவுக்கு ஜே’ எனவும் கோஷம் எழுப்பினர்.

இது தொடர்பாக அவர் ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: என்றும் நினைவில் வைக்கும் வகையில் பாரிஸ் நகரில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்துவதை பனியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்களின் அன்பை கண்டு பெருமிதம் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அளித்த விருந்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது மேக்ரானை சந்தித்து பேசிய அவர், பிறகு அமெரிக்க துணை அதிபர் ஜேடி வேன்சையும் சந்தித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: பாரீசில் எனது நண்பர் இமானுவேல் மேக்ரானை சந்தித்ததில் மகிழ்ச்சி எனக் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.