மோசடி கணக்குகளை அடையாளம் காண ஏ.ஐ தொழில்நுட்பம் – அமித்ஷா

சைபர் குற்றங்களைத் தடுக்க, மோசடி கணக்குகளை அடையாளம் காண ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

இணையப் பாதுகாப்பு குறித்தும் இணைய மோசடி குறித்தும் ஆலோசிக்க, உள்துறை அமைச்சகத்திற்கான பார்லிமென்ட் ஆலோசனைக் குழு கூட்டம் இன்று டில்லியில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார்.

அமித் ஷா பேசியதாவது:

தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக, அரசின் சைபர் குற்ற கண்காணிப்பு மற்றும் கண்டறிதல் பிரிவான இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் (I4சி) பரிந்துரைகளின் அடிப்படையில் இதுவரை 143,000க்கும் அதிகமான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 805 செயலிகள் மற்றும் 3,266 வலைத்தள இணைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன.

ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான தரவு புள்ளிகள் பகிரப்பட்டுள்ளன. 19 லட்சத்திற்கும் மேற்பட்ட மோசடி கணக்குகள் பிடிபட்டுள்ளன.

மேலும் ரூ.2,038 கோடி மதிப்புள்ள சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் தடுக்கப்பட்டுள்ளன.

மின்னிலக்க முறையில் இடம்பெறும் மோசடிகளைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படும்.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கப் பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகளை அடையாளம் கண்டு, அவற்றைத் தொடக்கத்திலேயே முடக்க செயற்கை நுண்ணறிவு உதவும்.

அவ்வகையில், ரிசர்வ் வங்கியின் புத்தாக்க மையம் ‘மியூல்ஹன்டர் ஏஐ’ எனும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கிறது. அது மோசடிக் கணக்குகளை அடையாளம் காண வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் உதவும்.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட் ...

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட்டின் மறுமலர்ச்சி; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் கோவை ஈஷாவில் மஹா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவு ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ராகுல் உருவெடுத்துள்ளார்  மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ ச ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு பிரதமர் நரேந்திர மோடியை, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்தை மக்​கள் நலனுக்​காக பயன்​படுத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

மருத்துவ செய்திகள்

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...