இரட்டை வரி விதிப்பை தவிர்க்க இந்தியா கத்தார் ஒப்பந்தம்

அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு வந்த கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானியை, டில்லியில் நேற்று சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார்.

இரு நாட்கள் அரசு முறை பயணமாக, நம் நாட்டுக்கு நேற்று முன்தினம் வந்த மேற்காசிய நாடான கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமத் அல்தானிக்கு, தலைநகர் டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், நேற்று சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

தொடர்ந்து, டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில், கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமத் அல்தானியை சந்தித்த பிரதமர் மோடி, இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார். அப்போது, பரஸ்பர நலன் சார்ந்த விவகாரங்கள் மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இந்த சந்திப்பில், மத்திய அமைச்சர்கள் பியுஷ் கோயல், நிர்லமா சீதாராமன், ஹர்தீப் சிங் பூரி, மன்சுக் மாண்டவியா, பி.கே.மிஸ்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, இந்தியா – கத்தார் இடையே, வர்த்தகம், தொழில்நுட்பம், முதலீடு, எரிசக்தி, உணவு பாதுகாப்பு, கலாசாரம் உள்ளிட்ட விவகாரங்களில், பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

மேலும், இரட்டை வரி விதிப்பை தவிர்க்கவும், வருமான வரிகள் தொடர்பான நிதி மோசடியை தடுக்கவும் இரு நாடுகளும் திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது, இரு நாடுகளுக்கும் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தத்தை நிறுவுவதற்கு ஒரு முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள ...

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள பாஜக சொல்கிறார் ப . சிதம்பரம் இண்டி கூட்டணி பலவீனமாக இருப்பதாகக் கூறிய முன்னாள் மத்திய ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர் ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச பாதுகாப்பில் விடவேண்டும்’ அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக, ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித்த இந்திய வீரர்கள் பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்து இந்திய விமானப்படை மற்றும் ராணுவ ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் வி ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் விஞ்ஞானிகளுடன் இஸ்ரோ தொழில்நுட்ப ஆலோசனை சந்தரயான் -5 திட்டத்தின் கூட்டு முயற்சிகள் குறித்து, இஸ்ரோ ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ்தான் முடிவு இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்கும் வகையில், ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பா ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்: ஜெய்சங்கர் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது, ...

மருத்துவ செய்திகள்

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...