இந்தியா மீது உலக நாடுகள் பார்வை – தாவர்சந்த் கெலாட் பெருமிதம்

”ஆன்மிகம் மற்றும் மன நலனுக்காக உலக நாடுகள் பார்வை இந்தியா மீது உள்ளது,” என்று, கவர்னர் தாவர்சந்த் கெலாட் பெருமிதமாக கூறினார்.

துமகூரு குனிகல் பிடனகெரே கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட நவக்கிரக தம்பதியர் கோவில் மற்றும் பசவேஸ்வர மடத்தின் புதிய கோபுரத்தை, கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேற்று திறந்து வைத்து பேசியதாவது:

மடத்தின் மடாதிபதிகள், முனிவர்கள், ஆச்சார்யர்கள் ஆகியோருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். இந்த விழாவில், உங்களுடன் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம். பிடனகெரே பசவேஸ்வரா மடம் மத தலம் மட்டும் இல்லை. பக்தர்களுக்கு ஆன்மிக அமைதி மற்றும் உத்வேகம் அளிக்கும் இடமாக உள்ளது. சமூக உத்வேகத்தின் மையமாக விளங்குகிறது.

பசவேஸ்வரரின் போதனைகள், சமூக சீர்திருத்தத்திற்கு நிறைய பங்களித்து உள்ளன. இங்கு வரும் மக்கள், பசவேஸ்வரரின் போதனைகளை கேட்பது மட்டும் அல்லாமல், வாழ்க்கையின் ஒழுக்கம், சமத்துவம், பக்தியை பின்பற்றவும் உத்வேகம் பெறுகின்றனர். உலக புகழ்பெற்ற 161 அடி உயர ஐந்து முகம் கொண்ட ஆஞ்சநேயர் சிலை இங்கு நிறுவப்பட்டு உள்ளது. சனீஸ்வரர், நவக்கிரகங்களை தரிசிக்க நிறைய பக்தர்கள் வருகின்றனர்.

பன்முக தன்மை கொண்ட மடம், சமூக முன்னேற்றத்திக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு அளித்து உள்ளது. இங்கு ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குகிறீர்கள். சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகளை தீர்க்க, நீங்கள் எடுத்து வரும் நேர்மறையான நடவடிக்கைகள் பாராட்டதக்கவை. ஆன்மிகம் மற்றும் மன நலனுக்காக உலக நாடுகள் பார்வை இந்தியா மீது உள்ளது. இதற்கு ‘பிரயாக்ராஜ் கும்பமேளா’ சிறந்த உதாரணமாக விளங்குகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...