ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் இந்தாண்டு இறுதிக்குள் முடிவுக்கு வரும்

ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்ற இருநாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான பேச்சு, கடந்த 17 ஆண்டுகளாக இழுபறியாக இருந்து வந்தது.

ஒரு சில விவகாரங்களில் ஒருமித்த கருத்து ஏற்படாததை அடுத்து, 2013ல் இந்த பேச்சு நிறுத்தப்பட்டது. பின், 2022 ஜூனில் மீண்டும் துவங்கியது.

இந்நிலையில், ஐரோப்பிய கமிஷனின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நம் நாட்டுக்கு வந்துள்ளார். ஐரோப்பிய யூனியனில் இடம் பெற்றுள்ள நாடுகளின் மூத்த தலைவர்களும் அவருடன் வந்தனர்.

இவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை டில்லியில் நேற்று சந்தித்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதித்தனர். அப்போது, இந்தோ- – பசிபிக் பகுதியில் இருவழி ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த தலைவர்கள் முடிவு செய்தனர்.

நெருங்கிய நட்பு நாடுகளான ஜப்பான், தென் கொரியா உடன் உள்ள உறவை போல, இந்தியா உடனான ராணுவ உறவை வலுப்படுத்த விரும்புவதாக வான் டெர் லேயன் அப்போது தெரிவித்தார்.

இந்த சந்திப்புக்கு பின் பிரதமர் மோடி கூறுகையில், ”இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

”இந்த ஆண்டு இறுதியில் இந்தியா தலைமை ஏற்று நடத்தவுள்ள இந்தியா – ஐரோப்பிய யூனியன் மாநாட்டில் ஒப்பந்தம் நிறைவேற்றப்படும்,” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.