பாலியல் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து கட்ச் கூட்டம் நடத்தப்படுமா? அண்ணாமலை கேள்வி

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி: தி.மு.க.,விற்கு, மேடை போட்டு பா.ஜ.,வை விமர்சனம் செய்வதே வேலையாகி விட்டது. மக்கள் பிரச்னைகளை பற்றிப் பேச அவர்களுக்கு நேரமில்லை.

விகிதாச்சார அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வதில் தமிழகத்திற்கு லோக்சபா தொகுதிகள் குறையும் என்கிறார், முதல்வர் ஸ்டாலின்.

அதுபோன்று தொகுதிகள் குறையாது என பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் உறுதியளித்துவிட்டனர். பிரச்னையே எழாதபோது, அது குறித்து பேசுவதற்கு எதற்கு அனைத்துக்கட்சி கூட்டம்? அங்கு போய் பேச எதுவும் இல்லை என்பதால், பா.ஜ., புறக்கணிக்கிறது.

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்னை, பாலியல் சம்பவங்களை கட்டுப்படுத்த அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தினால், முதல் ஆளாக பா.ஜ., பங்கேற்கும். மும்மொழி கற்பிக்கும் பள்ளியில், தாய்மொழியான தமிழில் தான் படித்தேன்.

ஆனால், முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு அதெல்லாம் தெரியாது; காரணம் அவர் படிக்காதவர்.

இலங்கையில், புதிய அரசு பதவியேற்ற பின், தமிழக மீனவர்களுக்கு சிக்கல் அதிகமாகி உள்ளது; பலர் கைது செய்யப்படுகின்றனர். மீனவர்கள் என்ற போர்வையில், சிலர் கடத்தல் தொழில் செய்கின்றனர்.

அவர்களை, நம் கடலோர காவல்படையினர் தடுத்து நிறுத்த வேண்டும். மீனவர்கள் பிரச்னை குறித்து, தமிழக மீனவர்களுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்படும்.

இருநாட்டு அமைச்சர்கள், மீனவர்கள், அதிகாரிகள் இணைந்து விரைவில் கூட்டுக்கூட்டம் நடத்தப்பட்டு மீனவர்கள் கைது பிரச்னைக்கு தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

புதுதில்லியில் இந்திய செயற்கை ...

புதுதில்லியில் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க கண்காட்சி 2026-ஐத் திறந்து வைத்தார் பிரதமர் புதுதில்லியின் பாரத மண்டபத்தில் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க ...

இந்து மக்களுக்கு எதிரான வெறுப் ...

இந்து மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் முடிவுக்கு வந்துவிட்டது போட்றா வெடிய! இந்தியாவின் கைகளுக்குள் வந்த வங்கதேசம்; வெற்றி ...

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக ...

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் புதிய பிரதமர் அலுவலகம் ஒரு பார்வை அம்மாடியோவ்! இவ்வளவு பாதுகாப்பா?; ஒரு ஈ, எறும்பு கூட ...

வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய ...

வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய்களைப் பரப்பும் ராகுல்; மத்திய அமைச்சர்கள் சவுகான், கோயல் குற்றச்சாட்டு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...