தாமரை மலர்ந்தே தீரும்

தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக திருச்சி மன்னார்புரம்பகுதியில் நேற்று (மார்ச் 23) பாரதிய ஜனதா கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பாஜக மூத்த நிர்வாகியும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் பேசுகையில், கோட்டையில் இருப்பவர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டு, பாஜக தலைமையில் ஆட்சி அமைக்கும் என்பதற்கு இந்த கூட்டம் போதும். திருச்சியில் கடல்அலைகள் போன்று பாஜக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.பாஜக மாநில தலைவர் அண்ணாமலையே தலைமை ஏற்கவா என்று நாங்கள் சொல்கிறோம். மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துரைமுருகன், டி ஆர்.பாலு ஓரமாக இருந்தனர். இதுதான் சமூக நீதியா? இந்தி தெரியாது, அகநானூறு தெரியாது, புறநானூறு தெரியாது . ஆனால் 200 தெரியும். திமுக ஆட்சியை அகற்ற நாங்கள் உறுதிமொழி ஏற்கிறோம். திமுக பொய்பிரசாரம் செய்கிறார்கள். ஒருகுடும்பம் வாழ அனைவரும் ஓடி, ஓடி உழைக்க போகிறீர்களா?இல்லை சாமானிய மக்களுக்கு உதவி செய்யும் பாஜகவுடன் இருக்க போகிறீர்களா? 2026 ம் ஆண்டு திமுக தொண்டர்கள் பாஜகவுடன் இணைந்து பணியாற்றும் சூழ்நிலை உள்ளது. திமுகவில் உண்மையாக உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லை. வருகிற சட்டமன்றத் தேர்தலில் பாஜக நிச்சயம் கோட்டையைபிடிக்கும். தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...