மத்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை தொடர்பான பணிகள் முடிவுக்குவந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். 4ஜி சேவையை வலுப்படுத்த நாடுமுழுவதும் 75 ஆயிரத்துக்கு மேற்பட்ட டவர்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில், கூடுதலாக 25 ஆயிரம் டவர்கள் நிறுவப்படும் என அவர் கூறியுள்ளார்.
இந்த ஒருலட்சம் டவர்களும் 5ஜி சேவைக்காக மாற்றியமைக்கும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக கூறியுள்ள அவர், ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்கும் என அறிவித்துள்ளார்.
மேலும், பிஎஸ்என்எல் உள்கட்டமைப்பை மேம்படுத்த 80 ஆயிரம்கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 3G சேவைகளை படிப்படியாக நீக்கும்பணி நடைபெற்று வருவதாக ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |