ஜம்மு-காஷ்மீர் இயக்கம், ஜனநாயக அரசியல்இயக்கம் பிரிவினை வாதத்துடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளது. இதனை வரவேற்பதாக உள்துறை அமைச்சர் அமித்-ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமித் ஷா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
ஹரியத்தின் இரண்டு அமைப்புகளான ஜம்மு-காஷ்மீர் இயக்கம், ஜனநாயக அரசியல் இயக்கம் பிரிவினைவாதத்துடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளது. பாரதஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான இந்த முயற்சியை நான் வரவேற்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இதைபோன்று அனைத்து அமைப்புகளும் முன்வந்து பிரிவினைவாதத்தை முற்றிலுமாக கைவிடவேண்டும் என கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும், வளர்ந்த, அமைதியான மற்றும் ஒன்றுபட்டபாரதத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்ற பிரதமர் நரேந்திரமோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு இது ஒருபெரிய வெற்றியாகும் என்றும் குறித்த பதிவில் அமித்-ஷா தெரிவித்துள்ளார்.
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |