போதைபொருள் வர்த்தகத்திற்கு எதிரான அரசின் வேட்டை தொடரும் – அமித்ஷா

போதை பொருள் வர்த்தகத்திற்கு எதிரான அரசின் இடைவிடாத வேட்டை தொடரும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

போதை பொருள் நடமாட்டத்துக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைககள் கடுமையாக எடுக்கப்படும் என்று அண்மையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியுடன் கூறி இருந்தார். போதை பொருள் இல்லாத இந்தியா கட்டமைக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.

இந் நிலையில் டில்லியில் ரூ.27.4 கோடி மதிப்புள்ள போதை பொருட்களைக் கைப்பற்றி ஐந்து பேரைக் கைது செய்துள்ளதாக அவர் கூறி உள்ளார். இதுகுறித்து அவர் தமது எக்ஸ் பதிவில் கூறி உள்ளதாவது;

போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிரான அரசின் வேட்டை இடைவிடாமல் தொடரும். டில்லி என்சிஆர் பகுதியில் பெரிய போதை பொருள் நெட்வொர்க் முறியடிக்கப்பட்டுள்ளது.

போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் டில்லி போலீசார் இணைந்து 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.27.4 கோடி மதிப்புள்ள மெத்தம்பேட்டமைன், கொகைய்ன் உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்துள்ளது.

இந்த நடவடிக்கை எடுத்த போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் டில்லி போலீசுக்கு பாராட்டுகள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.