”வரும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நக்சலிசத்தை நிரந்தரமாக ஒழிக்க இந்தியா தயாராக உள்ளது” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நக்சல் இல்லாத பாரதத்தை உருவாக்க மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று நமது நாட்டில், இடதுசாரி தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 12ல் இருந்து வெறும் 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது ஒரு புதிய மைல்கல்.
பா.ஜ., அரசு நக்சலிசத்தை ஒழிக்க இரக்கமற்ற அணுகுமுறையை பின்பற்றி வருகிறது. இடைவிடாத முயற்சிகளுடன் வளர்ச்சியை உருவாக்கி வருகிறோம். நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக வரும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் வேரோடு நக்சலிசத்தை ஒழிக்க உறுதிபூண்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |