இந்தியாவுடன் இணைந்து செயலாற்ற நெதர்லாந்து உறுதி – ஜெய்சங்கர்

இந்தியா வந்துள்ள நெதர்லாந்து நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் காஸ்பர் வெல்ட்காம்ப், ”இரு நாடுகளுக்கும் இடையே செமி கண்டக்டர் தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஸ்திரமான ஒப்பந்தங்கள் இந்த ஆண்டில் கையெழுத்தாகும் என நம்புகிறேன். இரு நாடுகளும் இணைந்து செயலாற்ற விரும்புகிறேன்,” என்றார்.

ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் காஸ்பர் வெல்ட்காம்ப், இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். பின், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் சந்தித்தார்.

முன்னதாக, பத்திரிகையாளர்களிடம் வெல்ட்காம்ப் பேசியதாவது:

இந்தியாவுடன் அனைத்து மட்டத்திலுமான பங்குதாரர் நாடாக விளங்க நெதர்லாந்து விரும்புகிறது. இரு நாடுகளும் இணைந்து செயலாற்ற விரும்புகின்றன. குறிப்பாக, செமி கண்டக்டர், டிஜிட்டல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன் போன்ற விவகாரங்களில் நெதர்லாந்தும் பங்கேற்க விரும்புகின்றன.

நீண்ட காலமாக கையெழுத்திடப்படாமல் இருக்கும், இருதரப்பு வர்த்தகத்தை ஊக்குவிக்கும், இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என நம்புகிறேன். இரு நாடுகளுக்கும் இடையேயான ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த, நெதர்லாந்து திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த மாதம், நெதர்லாந்து நாட்டின் ராணுவ அமைச்சர் ரூபன் பிரிகெல்மான்ஸ், நம் நாட்டின் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...