சட்டத்தை ஏற்க மாட்டோம் என்று கூற எவருக்கும் உரிமை இல்லை – அமித்ஷா

வக்ப் என்பது, முஸ்லிம்கள் தங்களுடைய சொந்த சொத்துகளை, மதம் தொடர்பான நல்ல பயன்பாட்டுக்கு தானமாக வழங்குவது. ஆனால், மற்றவர்கள் சொத்துக்களை பறித்துக் கொள்வது வக்ப் சொத்தாக முடியாது.

பல மாநிலங்களில், கோவில் நிலங்கள், கிராமங்கள் என, அனைத்தையும் வக்ப் சொத்தாக மாற்றியுள்ளனர். அரசு நிலங்களை வக்ப் சொத்தாக அபகரித்துள்ளனர். அரசு நிலங்கள், கிராமங்களில் பொதுப் பயன்பாட்டுக்கான நிலங்கள் அனைவருக்குமானது. அதற்கு வக்ப் வாரியங்கள் உரிமை கோர முடியாது. அதை மோடி அரசு அனுமதிக்காது.

வக்ப் என்பது ஏழை முஸ்லிம்களின் நலனுக்கானது. திருடுவதற்காக அல்ல. இந்த மசோதா அந்த திருட்டை நிறுத்தும்; மசோதா சொத்துகளை பாதுகாக்கும். தொல்லியல் துறை சொத்துகள், பழங்குடியினர் நிலம், தனியார் நிலம் போல, வக்ப் சொத்துகளை பாதுகாப்பதே இந்த மசோதாவின் நோக்கம்.

தனிநபர்கள், தங்களுக்கு சொந்தமான நிலத்தை மட்டுமே வக்புக்கு நன்கொடையாக வழங்க முடியும். மற்றவர்கள் நிலத்தையோ, அரசு நிலத்தையோ, வக்ப் சொத்தாக அறிவிக்க முடியாது.

இந்த மசோதா குறித்து தவறான தகவல்களை எதிர்க்கட்சிகள் பரப்புகின்றன. ஆனால், இந்த அரசு அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்லுமே தவிர, ஓட்டு வங்கி அரசியல் செய்ய மாட்டோம்.

வக்ப் வாரியம் என்பது மத அமைப்பு அல்ல, அது ஒரு நிர்வாக அமைப்பு. அதில் நடக்கும் முறைகேடுகளை தடுப்பதற்காகவே இந்த திருத்தம் செய்யப்படுகிறது. மசோதா முன்தேதியிட்டு அமல்படுத்தப்படாது.

வக்பு சொத்துகள் தொடர்பான பதிவுகளுக்கு, கலெக்டர்களே பொறுப்பாளராக இருப்பர் என்பதில் என்ன தவறு உள்ளது. எது அரசு நிலம், எது தனியார் நிலம் என்பதை நிர்வகிப்பது கலெக்டர்களே. வழிபாட்டு தலங்கள் கட்டலாம். ஆனால், அரசு நிலத்தில் எப்படி கட்ட முடியும். அதனால், கலெக்டர்களே பொறுப்பாளர்களாக இருப்பர்.

இந்த மசோதா, பல தரப்பினருடன் ஆலோசிக்கப்பட்டு, பலருடைய கருத்துக்கள் கேட்கப்பட்டு, நீண்ட விவாதங்களுக்குப் பிறகே தயாரிக்கப்பட்டுள்ளது. யாருடைய உருட்டல், மிரட்டல்களுக்கு பயந்தோ, அவர்களுடைய ஆதரவு தேவை என்றோ, ஓட்டு வங்கிக்காகவோ இந்த மசோதா தயாரிக்கப்படவில்லை.

நீங்கள் மக்களை ஓட்டுகளாக பார்க்கிறீர்கள். நாங்கள் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பார்க்கிறோம். இந்த மசோதா சட்டமானால், அதை சிறுபான்மையினர் ஏற்க மாட்டார்கள் என ஒரு எம்.பி., கூறினார்.

எந்த சட்டமாக இருந்தாலும், அது அனைத்து மக்களையும் கட்டுப்படுத்தும். பார்லிமென்டால் நிறைவேற்றப்படும் சட்டத்தை ஏற்க மாட்டோம் என்று எவரும் கூற முடியாது.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

உலக சுகாதார தினம் : “பூவுலகை உரு ...

உலக சுகாதார தினம் : “பூவுலகை உருவாக்க உழைக்கும் அனைவருக்கும் நன்றி” – பிரதமர் மோடி உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) தொடங்கப்பட்ட உலக சுகாதார ...

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே ...

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே எங்களது தாரக மந்திரம்: பாஜக 47-வது நிறுவன தினத்தில் பிரதமர் மோடி பெருமிதம் ​பாஜக​வின் 47-வது நிறுவன நாளை முன்​னிட்​டு, நாடு முழு​வதும் ...

மருத்துவ செய்திகள்

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...