பிரதமர் நரேந்திர மோடியை அவமதித்த முதல்வர் ஸ்டாலின் – அண்ணாமலை கண்டனம்

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவில் பங்கேற்காமல் பிரதமரை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவமதித்துள்ளார். இதற்காக தமிழக மக்களிடம் முதல்வர் மன்னிப்புக் கோர வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பாம்பனில் புதிய ரயில் பாலத்தை திறந்துவைத்து, ராமேசுவரத்தில் ரூ.8,300 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்துள்ளார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை. இதற்காக முதல்வர் சொல்லும் காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழகம் வரும் பிரதமரை வரவேற்க வேண்டியது முதல்வரின் கடமையாகும். அந்தக் கடமையை நிறைவேற்றாமல், ஊட்டிக்குச் சென்று விட்டார். பாஜக இதை வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழக மக்களுக்காகப் பணி செய்ய வந்த பிரதமரை அவமதிக்கும் வகையில் முதல்வர் நடந்து கொண்டுள்ளார் அதற்காக தமிழக மக்களிடம் முதல்வர் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

முதல்வர் ஊட்டியில் அமர்ந்துகொண்டு, ராமேசுவரம் வரும் பிரதமர் தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேச வேண்டும் என்று கூறியுள்ளார். தொகுதி மறு சீரமைப்பு குறித்து தமிழக முதல்வர் தவறாகப் பேசி வருகிறார். பிரதமர் பங்கேற்ற விழா அரசு விழா. இதனால்தான் நான் மேடைக்குச் செல்லவில்லை. அதேநேரத்தில், பிரதமர் ராமேசுவரம் கோயிலுக்குச் சென்றபோது உடன் சென்றேன்.

நீட் தேர்வை ரத்து செய்தால்தான் பாஜகவுடன் கூட்டணி என பழனிசாமி தைரியமாக கூறுவாரா என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திரா காந்தியை விமர்சித்த கருணாநிதி, பின்னர் இந்திராவை வரவேற்றார். நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தெரியும் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், நான்கு ஆண்டுகளாக அந்த ரகசியம் என்ன என்பதை சொல்லவில்லை. உப்பு சப்பு இல்லாத காரணத்தை முன்வைத்து, அடுத்தவர்கள் கூட்டணி குறித்து முதல்வர் விமர்சித்துள்ளார். முதல்வர் வேலையில்லாமல் உள்ளார் என்பதையே இது காட்டுகிறது.

பாஜக மாநிலத் தலைவர் போட்டியில் நான் இல்லை என்று பலமுறை கூறிவிட்டேன். இதுவரை தலைவராக இருந்து என்ன பணி செய்தேனோ, அதே பணியைத் தொண்டனாக இருந்து தொடர்ந்து செய்வேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

தமிழிசை கருத்து:

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, “தமிழக மக்களுக்கு நல்ல திட்டங்களை சமர்ப்பிக்கும் இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டிருக்க வேண்டும். பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு முதல்வர் வராமல் இருந்தது சரியல்ல” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...