பிரிட்டனுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அந்நாட்டின் பிரதமர் கெய்ர் ஸ்டாமரை நேற்று சந்தித்து, தாராள வர்த்தக ஒப்பந்தம், பிரிட்டன் பல்கலைகளை இந்தியாவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சு நடத்தினார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு, அரசு முறை பயணமாக, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன் சென்றுள்ளார். தலைநகர் லண்டனில் நேற்று நடந்த, இந்தியா – பிரிட்டன் இடையேயான, 13வது பொருளாதார மற்றும் நிதி கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.
இதில், பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமர், அந்நாட்டின் நிதி அமைச்சர் ரச்சல் ரீவ்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், இந்தியா – பிரிட்டன் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தத்தை துவங்குவது, பிரிட்டன் பல்கலைகளை இந்தியாவுக்கு கொண்டு வருவது குறித்து, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமருடன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.
தாராள வர்த்தக ஒப்பந்தம் குறித்து, இந்தியா – பிரிட்டன் இடையே இரு ஆண்டுகளுக்கும் மேல் பேச்சு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |