அடுத்த தேர்தலில் தோல்வியடைந்தால் தி.மு.க., ஆட்சி என்பதே இருக்காது: நயினார் நாகேந்திரன் ஆரூடம்

“வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்தி விட்டால், இனி தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி என்பதே இருக்காது,” என, திண்டுக்கல்லில் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் நடந்த பா.ஜ., மதுரை பெருங்கோட்ட தொண்டர் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:

தமிழகத்தில் இரட்டை இலை – தாமரை கூட்டணி உறுதியாகியுள்ளது. இதில் யார் யார் எவ்வளவு பங்கேற்பு என்பது குறித்து நமக்கு தேவையில்லை. பா.ஜ., தொண்டர்கள் சமூக வலைதளங்களில் இதுகுறித்து, எதுவும் பகிரத் தேவையில்லை.

தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து அகற்றுவது மட்டுமே நோக்கமாக இருக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியில், இன்னும் யாரெல்லாம் இடம்பெற வேண்டும் என்பது குறித்து, மத்திய அமைச்சர் அமித் ஷா, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முடிவு எடுப்பர்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும். அதில், பா.ஜ.,வைச் சேர்ந்தோர் அதிகம் பேர் இருப்பர்.

‘மத்திய அரசிடம் இருந்து தமிழகம் அவுட் ஆப் கன்ட்ரோலுக்கு சென்று விட்டது’ என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வரும் 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., தமிழகத்தில் இருந்து அவுட் ஆப் கன்ட்ரோலுக்கு செல்ல வேண்டும் என்பதே, நம் எண்ணமும் செயலுமாக இருக்க வேண்டும். வரும் தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்திவிட்டால், இனி தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி என்பதே இருக்காது.

தேசிய பொதுக்குழு உறுப்பினர் எச்.ராஜா பேசியதாவது:

தமிழகத்தில் அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணி, 53 சதவீதம் பெறும் என்ற கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. இதனால், திருத்தணியில் பேசும் போது முதல்வர் ஸ்டாலின் தடுமாறினார்.

டாஸ்மாக் ஊழல் நடக்கவில்லை என்றால், 20 நாட்களில் வழக்கை முடியுங்கள் எனச் சொல்லி, அதற்கு தி.மு.க., ஒத்துழைப்பு அளித்திருக்கலாம். அதைவிடுத்து, இழுத்தடிப்பது என்பது, செய்த ஊழல் வெளிவந்துவிடும் என்ற பயம் தான்.

பா.ஜ., மாநில பொதுச்செயலர் ராம.சீனிவாசன் பேசியதாவது: மத்திய அரசுக்கு சவால் விட்டதால்தான், முன்னாள் முதல்வர் கருணாநிதியால், தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாமல் போனது.

தற்போது, முதல்வர் ஸ்டாலின் சவால் விட்டுள்ளார். அடுத்து, 200 ஆண்டுகளுக்கு அவரால் ஆட்சிக்கு வர முடியாமல் போய்விடும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...