எந்த குடிமகனும் பின்தங்கி இருக்க கூடாது – பிரதமர் மோடி

”இந்தியாவின் முழுமையான வளர்ச்சி என்பது எந்த கிராமமும், எந்த குடும்பமும், எந்த குடிமகனும் பின்தங்கி இருக்கக்கூடாது என்பதுதான்” என பிரதமர் மோடி பேசினார்.

டில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: எங்கள் அரசு செயல்படுத்தி வரும் கொள்கைகள் அடுத்த 100 ஆண்டுகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும். இந்தியாவின் முழுமையான வளர்ச்சி என்பது எந்த கிராமமும், எந்த குடும்பமும், எந்த குடிமகனும் பின்தங்கி இருக்கக்கூடாது என்பதுதான். ஏழைகளின் பிரச்னைகளை அரசு ஊழியர்கள் கேட்க வேண்டும்.

அவர்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் முன்னுரிமை கொள்ள வேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக்காக அரசு ஊழியர்கள் செயல்பட வேண்டும். இன்று நாம் வேகமாக மாறிவரும் உலகில் இருக்கிறோம். வேகமாக மாறி வரும் காலங்களில் உலகளாவிய சவால்களை நாம் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.

உணவு, நீர் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு இன்னும் ஒரு பெரிய சவாலாக இருப்பதை காண்கிறீர்கள். இது ஒரு பெரிய நெருக்கடி. நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சிற்பிகள் அரசு ஊழியர்கள். நீங்கள் வெறும் அரசு ஊழியர் மட்டுமல்ல, புதிய இந்தியாவின் கைவினைஞர்கள். கடந்த 11 ஆண்டுகளில் நாடு அடைந்துள்ள வெற்றிகள், வளர்ந்த இந்தியாவின் அடித்தளத்தை பெரிதும் வலுப்படுத்தியுள்ளன.

இந்தியா இப்போது உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், அடிப்படை வசதிகளை நிறைவு செய்வதே நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...