வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்! எரிசக்தி, ராணுவ ஒத்துழைப்பு குறித்தும் ஆலோசனை

அரசு முறை பயணமாக வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், டில்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தம் செய்வது தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபராக, குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப், கடந்த ஜனவரியில் பதவியேற்றார். இதைத் தொடர்ந்து, பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அமெரிக்க பொருட்களுக்கு மற்ற நாடுகள் விதிக்கும் வரிகள் மிகவும் அதிகமாக இருப்பதாக கூறி, அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார்.

இந்தியா உட்பட, 60 நாடுகளுக்கு பரஸ்பர வரி விகிதங்களை அவர் சமீபத்தில் வெளியிட்டார். அதற்கடுத்த சில நாட்களில், 90 நாட்களுக்கு இதை நிறுத்தி வைப்பதாக அவர் கூறினார்.

இந்த வரி போர் நடந்து வரும் நிலையில், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் நான்கு நாள் இந்திய பயணமாக நேற்று வந்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவரது மனைவி உஷா, குழந்தைகள் மற்றும் அதிகாரிகள் குழுவினரும் உடன் வந்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியை, அவருடைய இல்லத்தில் வான்ஸ் நேற்று மாலை சந்தித்து பேசினார். தன் மனைவி மற்றும் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தார். அவர்களுடன், மோடி சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, இரு தரப்பு பேச்சில், மோடி மற்றும் வான்ஸ் ஈடுபட்டனர். இதில், இரு தரப்பு அதிகாரிகள் குழுவினரும் பங்கேற்றனர். இந்த பேச்சின்போது, வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

பின்னர் வான்ஸ் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளித்தார்.

இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் செய்வது தொடர்பான பேச்சுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களுக்கு, இரு தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

எரிசக்தி, ராணுவம், முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்பங்கள் மற்றும் பிற துறைகளில், இரு தரப்பு ஒத்துழைப்புகளில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் முன்னேற்றங்களுக்கு இரு தலைவர்களும் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

பரஸ்பரம் நலன் சார்ந்த, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பாகவும் இருவரும் பேசினர். இந்த விஷயங்களில் தொடர்ந்து ஒத்துழைத்து செயல்பட உறுதி ஏற்றனர்.

எரிசக்தி, தொழில்நுட்பம், ராணுவம் உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு வாழ்த்துகளை தெரிவித்த பிரதமர் மோடி, இந்தாண்டு இறுதியில் அவருடைய இந்திய பயணத்தை எதிர்நோக்குவதாக கூறியுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா உட்பட, 60 நாடுகளுக்கு பரஸ்பர வரி விகிதங்களை அவர் சமீபத்தில் வெளியிட்டார். அதற்கடுத்த சில நாட்களில், 90 நாட்களுக்கு இதை நிறுத்தி வைப்பதாக அவர் கூறினார்.

இந்த வரி போர் நடந்து வரும் நிலையில், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் நான்கு நாள் இந்திய பயணமாக நேற்று வந்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவரது மனைவி உஷா, குழந்தைகள் மற்றும் அதிகாரிகள் குழுவினரும் உடன் வந்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியை, அவருடைய இல்லத்தில் வான்ஸ் நேற்று மாலை சந்தித்து பேசினார். தன் மனைவி மற்றும் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தார். அவர்களுடன், மோடி சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, இரு தரப்பு பேச்சில், மோடி மற்றும் வான்ஸ் ஈடுபட்டனர். இதில், இரு தரப்பு அதிகாரிகள் குழுவினரும் பங்கேற்றனர். இந்த பேச்சின்போது, வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

பின்னர் வான்ஸ் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ ...

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ.7,200 கோடி திட்டங்கள். பிரதமர் நரேந்திர மோடி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி ஒரு 10 பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்;பிரதமர் மோடி குற்றச்சாட்டு பீஹாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்ப ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி; இந்திய ராணுவம் பெருமிதம் லடாக்கில் சுமார் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் வான் ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உ ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவும் ரூ.24 ஆயிரம் கோடி தன் தானிய ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

மருத்துவ செய்திகள்

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...