திமுக அரசு மீது அமைச்சர்களும் அதிருப்தி – வானதி சீனிவாசன் பேட்டி

”தி.மு.க., அரசு மீது மக்கள் மட்டுமல்ல; அமைச்சர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்,” என, பா.ஜ., — எம்.எல்.ஏ., வானதி தெரிவித்தார்.

சட்டசபை வளாகத்தில் அவர் அளித்த பேட்டி:

தகவல் தொழில்நுட்பத்துடன் இணைந்தால், எந்தெந்த துறைகள் மேம்படுமோ, அது நடக்கவில்லை என்பதை, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் தியாகராஜன் பேசியதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, திறனும், பணமும் உள்ள அமைச்சரிடம் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள் என்கிறார் தியாகராஜன். இதிலிருந்து, அவருக்கு ஏதோ மன வருத்தம் இருப்பது தெரிகிறது.

அதனால் தான் உடனே சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு, ‘நேர்மறையாக பதில் சொல்லுங்கள்’ என்கிறார்.

நிதியமைச்சராக இருந்த தியாகராஜன், 30,000 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் தொடர்பாக கருத்து தெரிவித்தார்.

அதற்கு தண்டனையாகவே, அவரது துறை மாற்றப்பட்டதாக தமிழக மக்கள் பேசிக் கொள்கின்றனர்.

தியாகராஜனுக்கு பெயரளவுக்கு ஒரு துறையை கொடுத்து விட்டு, அதற்கான நிதி, அதிகாரத்தை கொடுக்கவில்லை. இதன் வாயிலாக அவருக்கு மீண்டும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

வெளியில் இருந்து கருத்து சொல்வோரை, தி.மு.க., அரசு கைது செய்கிறது. அரசுக்கு உள்ளேயே கருத்து சொல்பவரின் துறையை மாற்றி, தண்டனை வழங்குகிறது. அதனால் தான் அமைச்சர் தியாகராஜன், சட்டசபையில் தன் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தி.மு.க., அரசின் நாட்களை நிறைவு செய்ய செய்ய, ஒவ்வொரு அமைச்சரும் அவர்கள் பாணியில் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த அரசின் மீது, மக்களுக்கு மட்டுமல்ல; அமைச்சர்களுக்கே அதிருப்தி இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள ...

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள பாஜக சொல்கிறார் ப . சிதம்பரம் இண்டி கூட்டணி பலவீனமாக இருப்பதாகக் கூறிய முன்னாள் மத்திய ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர் ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச பாதுகாப்பில் விடவேண்டும்’ அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக, ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித்த இந்திய வீரர்கள் பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்து இந்திய விமானப்படை மற்றும் ராணுவ ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் வி ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் விஞ்ஞானிகளுடன் இஸ்ரோ தொழில்நுட்ப ஆலோசனை சந்தரயான் -5 திட்டத்தின் கூட்டு முயற்சிகள் குறித்து, இஸ்ரோ ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ்தான் முடிவு இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்கும் வகையில், ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பா ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்: ஜெய்சங்கர் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது, ...

மருத்துவ செய்திகள்

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...