திமுக அரசு மீது அமைச்சர்களும் அதிருப்தி – வானதி சீனிவாசன் பேட்டி

”தி.மு.க., அரசு மீது மக்கள் மட்டுமல்ல; அமைச்சர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்,” என, பா.ஜ., — எம்.எல்.ஏ., வானதி தெரிவித்தார்.

சட்டசபை வளாகத்தில் அவர் அளித்த பேட்டி:

தகவல் தொழில்நுட்பத்துடன் இணைந்தால், எந்தெந்த துறைகள் மேம்படுமோ, அது நடக்கவில்லை என்பதை, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் தியாகராஜன் பேசியதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, திறனும், பணமும் உள்ள அமைச்சரிடம் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள் என்கிறார் தியாகராஜன். இதிலிருந்து, அவருக்கு ஏதோ மன வருத்தம் இருப்பது தெரிகிறது.

அதனால் தான் உடனே சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு, ‘நேர்மறையாக பதில் சொல்லுங்கள்’ என்கிறார்.

நிதியமைச்சராக இருந்த தியாகராஜன், 30,000 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் தொடர்பாக கருத்து தெரிவித்தார்.

அதற்கு தண்டனையாகவே, அவரது துறை மாற்றப்பட்டதாக தமிழக மக்கள் பேசிக் கொள்கின்றனர்.

தியாகராஜனுக்கு பெயரளவுக்கு ஒரு துறையை கொடுத்து விட்டு, அதற்கான நிதி, அதிகாரத்தை கொடுக்கவில்லை. இதன் வாயிலாக அவருக்கு மீண்டும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

வெளியில் இருந்து கருத்து சொல்வோரை, தி.மு.க., அரசு கைது செய்கிறது. அரசுக்கு உள்ளேயே கருத்து சொல்பவரின் துறையை மாற்றி, தண்டனை வழங்குகிறது. அதனால் தான் அமைச்சர் தியாகராஜன், சட்டசபையில் தன் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தி.மு.க., அரசின் நாட்களை நிறைவு செய்ய செய்ய, ஒவ்வொரு அமைச்சரும் அவர்கள் பாணியில் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த அரசின் மீது, மக்களுக்கு மட்டுமல்ல; அமைச்சர்களுக்கே அதிருப்தி இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

மருத்துவ செய்திகள்

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...