பாகிஸ்தானியர்களின் விசா ரத்து – மத்திய அரசு அதிரடி

காஷ்மீர் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவையை நிறுத்தி வைத்துள்ள மத்திய வெளியுறவு அமைச்சகம், ஏற்கனவே வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் வரும் 27 ம் தேதி முதல் ரத்து செய்யவதாகவும் அறிவித்து உள்ளது. அதேபோல், பாகிஸ்தான் சென்றுள்ள இந்தியர்கள் அனைவரும் உடனடியாக தாயகம் திரும்ப உத்தரவிட்டு உள்ளது.

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் உடனான உறவுகளை துண்டித்துக் கொள்வதாக இந்தியா அறிவித்து உள்ளது. ‘ சார்க் ‘கூட்டமைப்பு நாடுகளுக்கான ‘விசா விதி விலக்கு’ பாகிஸ்தானுக்கு ரத்து செய்யப்படுகிறது. அந்த விசாவில் வந்து இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியே வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. வாகா – அட்டாரி எல்லை உடனடியாக மூடவும், பாகிஸ்தானை சேர்ந்த யாருக்கும் இந்தியாவிற்குள் பயணம் செய்ய அனுமதி கிடையாது. வாகா – அட்டாரி எல்லை வழியாக பாகிஸ்தானியர்கள் யாராவது வந்து இருந்தால், தகுந்த ஆவணங்களை காட்டி மே 1ம் தேதிக்குள் திரும்பவும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

இந்நிலையில், இந்த உத்தரவை பின்பற்றி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது

*பாகிஸ்தானியர்களுக்காக வழங்கப்பட்டு வந்த விசா சேவை உடனடியாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

*ஏற்கனவே வழங்கப்பட்டு பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா வழங்கிய விசா அனைத்தும் வரும் 27 ம் தேதி முதல் ரத்து செய்யப்படும்.

*மருத்துவ காரணங்களுக்காக வழங்கப்பட்ட விசா அனைத்தும் ஏப்., 29 வரை மட்டுமே செல்லுபடியாகும்

*இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரும், விசா காலாவதியாகும் முன்னர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.

*பாகிஸ்தான் செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்.

*பாகிஸ்தானில் வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக தாயகம் திரும்ப வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

இந்தியாவில் தங்கி உள்ள பாகிஸ்தானியர்கள் ஏராளமானோர், தங்கள் நாட்டிற்கு திரும்ப வாகா – அட்டாரி எல்லையில் குவிந்துள்ளனர்.

அதேபோல், தமிழகத்தில் தங்கி உள்ள பாகிஸ்தானியர்களை நாளைக்குள் வெளியேற்ற போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர். தொழில் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக தமிழகம் வந்துள்ள பாகிஸ்தானியர்களை கணக்கெடுக்கும் பணியை போலீசார் துவக்கி உள்ளனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ ...

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ.7,200 கோடி திட்டங்கள். பிரதமர் நரேந்திர மோடி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி ஒரு 10 பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்;பிரதமர் மோடி குற்றச்சாட்டு பீஹாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்ப ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி; இந்திய ராணுவம் பெருமிதம் லடாக்கில் சுமார் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் வான் ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உ ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவும் ரூ.24 ஆயிரம் கோடி தன் தானிய ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...