ஒரு சொட்டு நீர் கூட பாகிஸ்தானுக்கு செல்லக்கூடாது: தொலைநோக்கு திட்டம் தீட்டுகிறது மத்திய அரசு

சிந்து நதியில் இருந்து ஒரு சொட்டு நீர் கூட பாகிஸ்தானுக்கு செல்லாத வகையில் குறுகிய கால, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது என மத்திய அமைச்சர் சிஆர் பாட்டீல் கூறியுள்ளார்.

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடனான சிந்து நதி ஒப்பந்தத்தை இந்திய அரசு ரத்து செய்து உள்ளது. இந்த ஒப்பந்தம் போட்ட பிறகு முதல் முறையாக ரத்து செய்யப்படுகிறது.

ஒப்பந்தம் ரத்து தொடர்பாக முறையான அறிவிப்பை பாகிஸ்தானிடம் தெரிவித்து உள்ளது. மத்திய ஜல்சக்தித் துறை செயலர் தேவ்ஸ்ரீ முகர்ஜி இது தொடர்பான கடிதத்தை பாகிஸ்தான் நீர்வளத்துறை செயலாளர் சையத் அலி முர்தாசாவிற்கு அனுப்பி உள்ளார்.

இந்நிலையில், இந்த ஒப்பந்தம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டில்லியில் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் ஜல்சக்தித்துறை அமைச்சர் சிஆர் பாட்டீல் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்திற்கு பிறகு சிஆர் பாட்டீல் கூறியதாவது: மத்திய அமைச்சர் அமித் ஷா உடனான சந்திப்பின் போது, சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து தொடர்பான திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் 3 வகையான திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஒரு சொட்டு நீர் கூட பாகிஸ்தானுக்கு செல்லாத வகையில் குறுகிய கால, நடுத்தரம் மற்றும் நீண்ட கால திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் நதி தூர் தூரவாரப்பட்டு நீர் திருப்பி விடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட் ...

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட்டின் மறுமலர்ச்சி; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் கோவை ஈஷாவில் மஹா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவு ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ராகுல் உருவெடுத்துள்ளார்  மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ ச ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு பிரதமர் நரேந்திர மோடியை, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்தை மக்​கள் நலனுக்​காக பயன்​படுத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

மருத்துவ செய்திகள்

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...