படைப்பாற்றலுக்கு குரல் கொடுப்போம் – ஜெய்சங்கர்

மஹாராஷ்டிராவின் மும்பையில் நடந்து வரும், ‘வேவ்ஸ்’ எனப்படும், சர்வதேச ஒலி – ஒளி மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டில் நேற்று பங்கேற்று, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பொறுப்பற்ற முறையில் பயன்படுத்துவது கவலையை அதிகரித்துள்ளது. ஒருதரப்பு சார்புகளை குறைத்தல், உள்ளடக்கத்தை ஜனநாயகப்படுத்துதல் மற்றும் அதன் நெறிமுறைகளுக்கு முன்னுரிமை அளித்தல் ஆகியவை முக்கிய விவாதமாக உள்ளன.

இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப காலத்தில், நம் பாரம்பரியமும், தொழில்நுட்ப மும் கைகோர்க்க வேண்டியது அவசியம். இந்த உலகம் அடிப்படையில், உள்ளார்ந்த ரீதியாக பன்முகத்தன்மை உடையது.

காலனித்துவம் மற்றும் பெரும் வல்லரசுகளின் ஆதிக்கத்தால் இந்த பன்முகத்தன்மை ஒடுக்கப்பட்டது.

சர்வதேச ஒழுங்கை ஜனநாயகப்படுத்த நாம் இப்போது முயற்சிக்கும்போது, அரசியல் மற்றும் பொருளாதார சுதந்திரத்தை மட்டும் உறுதிப்படுத்துவது போதாது. நம் மரபுகள், பாரம்பரியம், கருத்துகள், நடைமுறைகள் மற்றும் படைப்பாற்றலுக்கு குரல் கொடுப்பதும் அதே அளவுக்கு அவசியம்.

வரும், 2047ல் வளர்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நம் முயற்சிக்கு இந்த புதுமைகள் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மனதை நொறுங்கச் செய்த நிகழ்வு: ஜ ...

மனதை நொறுங்கச் செய்த நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல் ஆமதாபாத் விமான விபத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் ...

50 வாக்குறுதியைக் கூட நிறைவேற்ற ...

50 வாக்குறுதியைக் கூட நிறைவேற்றாத தி.மு.க.,: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க., அளித்த 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் 50ஐ ...

மகளிரை அவமதிக்கும் தி.மு.க., இனிய ...

மகளிரை அவமதிக்கும் தி.மு.க., இனியாவது திருந்தட்டும்; நயினார் நாகேந்திரன் காட்டம் ''மகளிரை அவமதிக்கும் தி.மு.க., அரசு இனியாவது திருந்தட்டும்'' என ...

அ.தி.மு.க-வுக்கு இணையான தொகுதிகள ...

அ.தி.மு.க-வுக்கு இணையான தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிட வேண்டும்: மோடிக்கு அண்ணாமலை கடிதம் 2026 தேர்தலில் அதிமுக போட்டியிடும் தொகுதி எண்ணிக்கையில் சரிபாதியில் ...

அகமதாபாத் விமான விபத்து – மீட்ப ...

அகமதாபாத் விமான விபத்து – மீட்பு நடவடிக்கையை விரைவுப்படுத்த பிரதமர் மோடி உத்தரவு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அகமதாபாத்திற்கு விரைந்து ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

மருத்துவ செய்திகள்

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...