புதல்வருக்கு மட்டுமே முதல்வர் கனவு இருக்க வேண்டுமா – தமிழிசை கேள்வி

வைகோ போன்றோர் ஈழப் பிரச்னை நடந்தபோது ஒரு மாதிரி பேசிவிட்டு, இப்போது போர் வேண்டாம் என்கின்றனர். போர் வேண்டுமா என்பது குறித்தெல்லாம் வைகோவிடம் யாரும் கேட்கப் போவதில்லை.

அதை ராணுவமும், ராணுவ அமைச்சகமும் தான் முடிவு செய்ய வேண்டும். காஷ்மீரை பற்றி மாற்றுக்கருத்து சொல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது; அனைவரும் நாட்டுப்பற்றுடன் செயல்பட வேண்டும்.

ராணுவத்தோடு துணை நிற்போம் என முதல்வர் சொல்லியிருப்பது தவறில்லை. அதில், பிரதமரோடு துணை நிற்போம் என சொல்லி இருக்க வேண்டாமா? இங்கு, ஒரு மாணவனின் சின்ன சாதனையைகூட, முதல்வர் சாதனை என சொல்கிறீர்கள்.

தமிழக அமைச்சரவையை ஊழல் அமைச்சரவை என்று சொன்னால் தவறில்லை என்று சொல்லும் அளவுக்கு, தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஊழல் வழக்குகள் நடந்து வருகின்றன.

தமிழக அமைச்சர்கள் ஒன்பது பேர் மீது வழக்குகள் உள்ளன. மக்கள் வரிப் பணத்தை சுருட்டியவர்கள், தமிழகத்தில் ஆட்சியில் உள்ளனர்.

தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளாகியும், வேங்கைவயல் சம்பவத்துக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.

புதுக்கோட்டையில் ஜாதி வேற்றுமை கலவரங்கள் ஏற்பட்டுள்ளன. சமூக நீதி என்பது தமிழகத்தில் துளியும் இல்லை. இதில் நான்காண்டு கால சாதனை என தி.மு.க., அரசு கொண்டாடி வருகிறது. ஆனால், தெருவில் நின்று மக்கள் திண்டாடி வருகின்றனர்.

புதிதாக வருபவர்களுக்கு முதல்வர் கனவு இருக்கக்கூடாது என முதல்வர் சொல்கிறார். ஏன், உங்கள் புதல்வருக்கு மட்டும் தான் அந்தக் கனவு இருக்க வேண்டுமா?

அ.தி.மு.க., – பா.ஜ., கூட்டணியை சந்தர்ப்பவாத கூட்டணி என்கிறார் ஸ்டாலின். இக்கூட்டணி சந்தர்ப்பத்துக்கு ஏற்ற கூட்டணி என்பதை அவர் உணர வேண்டும்.

எனக்கு குளிர் ஜுரம் வரும் என அமைச்சர் சேகர்பாபு சொல்கிறார். அதற்காக கவலைப்பட மாட்டேன். அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளும் திறன், இயற்கையிலேயே எனக்கு வாய்த்துள்ளது.

கலப்பட தண்ணீர் குடித்தால் மட்டும் தான் குளிர் ஜூரம் வரும். தமிழகத்தில் எல்லா இடங்களிலும் கலப்பட குடிநீர் தான் உள்ளது. பெருமை பீற்றிக் கொள்ளும் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணம் இது தான்.

அதனால், அமைச்சர் சேகர்பாபு, சொல்ல வேண்டியவர்களிடம் சொல்லி, தமிழக மக்களுக்கு நல்ல குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...