ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி; வீரர்களுடன் கலந்துரையாடல்

எல்லையோர மாநிலமான பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி வீரர்களுடன் கலந்துரையாடினார். இன்று ஆதம்பூர் விமானப் படை தளத்திற்கு சென்று நமது துணிச்சலான வீரர்களைச் சந்தித்தேன் என சமூக வலைதளத்தில் மோடி பதிவிட்டுள்ளார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இந்தியா-பாக்., போரில் பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளம் முக்கியப் பங்காற்றியது. இந்த விமானப்படை தளத்தில் இருந்து வீரர்கள் பாகிஸ்தானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை துல்லியமாக சுட்டு வீழ்த்தினர்.

தற்போது இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இன்று (மே 13) ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி வீரர்களுடன் கலந்துரையாடினார். பிரதமர் மோடிக்கு பாகிஸ்தானுக்கு அளித்த பதில் தாக்குதல் குறித்து வீரர்கள் விளக்கம் அளித்தனர்.

விமானப்படை தளத்தில் வீரர்களுடன் பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. தற்போது இந்த புகைப்படம் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.இந்த விமானப்படை தளத்தை தான், பாகிஸ்தான் ராணுவம் குண்டு வீசி அழித்து விட்டதாக முற்றிலும் பொய்யான தகவல்களை பரப்பியது. அதை பொய் என்று நிரூபிக்கும் வகையில், இன்று பிரதமர் மோடியின் பயணம், வீரர்களின் கலந்துரையாடல் அமைந்துள்ளது.
ஆதம்பூர் விமானப் படை தளத்திற்கு சென்ற புகைப்படத்தை வெளியிட்டு பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: இன்று ஆதம்பூர் விமானப் படை தளத்திற்கு சென்று நமது துணிச்சலான வீரர்களைச் சந்தித்தேன்.

துணிச்சல், உறுதிப்பாடு மற்றும் அச்சமின்மை ஆகியவற்றின் உருவகமாக இருப்பவர்களுடன் இருப்பது மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது.

நமது நாட்டிற்காக நமது ஆயுதப் படைகள் செய்யும் அனைத்திற்கும் இந்தியா என்றென்றும் நன்றியுடன் இருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உர தட்டுப்பாடுக்கு விரைவில் தீ ...

உர தட்டுப்பாடுக்கு விரைவில் தீர்வு: மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் உறுதி அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போரால் உர தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள விவகாரத்தில் ...

மேற்காசியாவில் நிலவும் பதற்றம ...

மேற்காசியாவில் நிலவும் பதற்றம் – மாநிலங்களவையில் அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் மேற்காசியாவில் நிலவும் அசாதாரணமான நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர ...

“மூன்று கோடி பெண்களை லட்சாதிபத ...

“மூன்று கோடி பெண்களை லட்சாதிபதியாக மாற்றியிருக்கிறோம்” – பிரதமர் மோடி மகிழ்ச்சி மத்திய அரசின் திட்டங்களால் நாடு முழுவதும் மூன்று கோடிக்கும் ...

“இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அ ...

“இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வல்லது பராமரிப்பு சார்ந்த பொருளாதாரம்” – பிரதமர் மோடி குழந்தைகளை பராமரித்தல், முதியோர்களை பராமரித்தல், சுகாதாரத்தை பராமரித்தல் உள்ளிட்ட ...

டெல்லியில் ரூ.33,500 கோடி மதிப்பில் ...

டெல்லியில் ரூ.33,500 கோடி மதிப்பில் திட்டங்கள்- தொடக்கி வைத்த மோடி டெல்லி யூனியன் பிரதேசத்​தில் ரூ.33,500 கோடி மதிப்​பிலான திட்​டங்​களை, ...

ஆதரவளிக்கும் பிரதமரின் விஸ்வக ...

ஆதரவளிக்கும்  பிரதமரின் விஸ்வகர்மா திட்டங்கள் உதயம் பதிவு தளம், உதயம் உதவித் தளம் ஆகியவற்றில் ...

மருத்துவ செய்திகள்

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.