முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன்

ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்” என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

டில்லியில், இந்திய போட்டி ஆணையத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: இந்தியாவில் நடக்கும் சொத்துகளை பணமாக்குதல், பங்குகளை திரும்பப் பெறுதல் மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு உள்ள கட்டமைப்பு சீர்திருத்தங்கள் ஆகியன சந்தை திறனை திறப்பதற்கும் போட்டியை தூண்டும் வகையிலும் இருக்கிறது.

ஒழுங்குமுறை ஒப்புதலில் ஏற்படும் தாமதம் என்பது, நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்துவதுடன், வணிக காலக்கெடுவிற்கு இடையூறு ஏற்படுத்தும். சர்வதேச அளவில், பல நாடுகளுடன் நாம் நடத்தும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திலும் தாக்கத்தை உண்டாக்கும்.

இதற்கு ஒழுங்குமுறை அதிகாரிகளின் திறன், தகுதி மற்றும் தயார்நிலையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனிப்பார்கள்.ஒழுங்குமுறை கட்டமைப்புகள் கடுமையான மேற்பார்வை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்றாலும், போட்டிக்கு அச்சுறுத்தல் இல்லாத இணைப்புகள் மற்றும் கையகபடுத்துதலுக்கு விரைவான மற்றும் தடையற்ற ஒப்புதல்களை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...