ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் பங்கை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார்.

உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: பாகிஸ்தான் வழக்கம் போலவே தோல்வியை எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை. இந்திய மண்ணில் பழிவாங்கும் தாக்குதல்களை நடத்த முயன்றது. அவர்கள் பொதுமக்களையும், வழிபாட்டுத் தலங்களையும் குறி வைத்து தாக்குதல் நடத்த முயற்சித்தனர். ஆனால் நமது படைகள் பொருத்தமான பதிலடி கொடுத்தன.

குற்றவாளிகளைத் தண்டிக்கும் அதே வேளையில், அப்பாவி உயிர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை நமது பாதுகாப்பு படையினர் உறுதி செய்தனர்.நமது வீரர்கள் நிபுணத்துவம் வாய்ந்த டாக்டர்கள் அல்லது அறுவை சிகிச்சை நிபுணர்கள் போன்று செயல்பட்டனர். அறுவை சிகிச்சையாளர்கள், நோய் உள்ள பகுதிகளில் துல்லியமாக கருவிகளை பயன்படுத்துவார்கள். நமது பாதுகாப்பு படையினரும் அது போன்று பயன்படுத்தினர். துல்லியமாக பயங்கரவாதத்தை வேரோடு அழிக்கும் வகையில் தாக்குதல் நடத்தினர்.

மே 7ம் தேதி இந்திய ராணுவ நடவடிக்கையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பல பயங்கரவாதிகள் முகாம்கள் தாக்கப்பட்டது. டாக்டர்களும், வீரர்களும் நாட்டிற்கு முக்கியமான வகையில் சேவையாற்றுவார்கள். ஒருவர் சுகாதாரத்தை பாதுகாப்பார். மற்றொருவர் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வார். பாகிஸ்தான் அதன் சொந்த பயங்கரவாதத்தால் அழிந்துவிடும். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பி ...

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பிரதமர் மோடி மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இர ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; -இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர். "இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல"- ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சிய ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சியினை கொடுத்த ஈரான் ஈரானின் செயல்பாடுகள் விபரீதமாக உள்ளன, யாரும் எதிர்பாராதபடி துருக்கியினை ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா அமித்ஷாவின் ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையி ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் பாடமெடுப்பதெல்லாம் நகைப்புக்குரியது. ஈரனின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்கப்பல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 ...

வெளியுறவுக் கொள்கை காலாவதியான ...

வெளியுறவுக் கொள்கை   காலாவதியான காங்கிரஸின் சித்தாந்தங்களால் அல்ல “இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க வேண்டும் என்று ...

மருத்துவ செய்திகள்

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...