ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை வழங்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
உலக சுகாதார கூட்டமைப்பின் 78-வது அமர்வு ஜெனிவாவில் நடைபெற்றது. இதில், காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:- உலக சுகாதாரத்தின் தொலைநோக்கு பார்வையை இந்தியா வலுவாக எதிரொலிக்கிறது. உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்துகிறோம். இது 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சையை வழங்குகிறது. ஆயிரக்கணக்கான சுகாதார கட்டமைப்புகள் இந்தியாவில் உள்ளன. எங்களுடைய கட்டணமில்லா தொலை மருத்துவச் சேவை 34 கோடிக்கும் அதிகமான ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
இந்தியாவின் அணுகுமுறை அளவிடக்கூடிய மற்றும் நிலையான மாதிரிகளை வழங்குகிறது. எங்கள் கற்றல்களையும் சிறந்த நடைமுறைகளையும் உலகத்துடன், குறிப்பாக உலகளாவிய தென்பகுதி நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். உலகிற்கு யோகாவை வழங்கிய நாட்டிலிருந்து, அனைத்து நாடுகளையும் பங்கேற்க அழைக்கிறேன். வேதங்களிலிருந்து ஒரு பிரார்த்தனையுடன் நான் முடிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |