உலகில் பன்முகத்தன்மை கொண்ட நாடு இந்தியா

”உலகில் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட நாடு இந்தியா. வட கிழக்கு மாநிலங்களில் வளர்ச்சியை உருவாக்க வேண்டும்” என பிரதமர் மோடி பேசுகையில் தெரிவித்தார்.

டில்லி பாரத் மண்டபத்தில் நடந்த வடகிழக்கு மாநில முதலீட்டாளர்கள் மாநாட்டில், பிரதமர் மோடி பேசியதாவது: அதிகமான தொழிலதிபர்கள் இங்கு வந்துள்ளீர்கள். இது உங்களது வட கிழக்கு மாநிலங்கள் மீதான அக்கறையை எடுத்துரைக்கிறது. வட கிழக்கு மாநிலங்கள் எழுச்சி பெற்று வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை கண்டு வருகிறது. மேலும் வளர்ச்சியை உருவாக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை அடைய, வடகிழக்கு மாநிலங்களில் வளர்ச்சியை கொண்டு வருவது முக்கியம். எங்களுக்கு, கிழக்கு என்பது ஒரு திசை மட்டுமல்ல. எங்களுக்கு அதிகாரத்தை அளித்துள்ளது. இந்தியா உலகின் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட நாடு. வர்த்தகம், பாரம்பரியம், ஜவுளி மற்றும் சுற்றுலா வரை, வடகிழக்கின் பன்முகத்தன்மை அதன் மிகப்பெரிய பலமாகும்.

அமைச்சர்கள் 700 க்கும் மேற்பட்ட முறை வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணம் செய்து ஆய்வு செய்துள்ளனர். கடந்த 11 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி அதிகம். வட கிழக்கு மாநிலங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.

கடந்த 11 ஆண்டுகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ ...

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ.7,200 கோடி திட்டங்கள். பிரதமர் நரேந்திர மோடி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி ஒரு 10 பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்;பிரதமர் மோடி குற்றச்சாட்டு பீஹாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்ப ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி; இந்திய ராணுவம் பெருமிதம் லடாக்கில் சுமார் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் வான் ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உ ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவும் ரூ.24 ஆயிரம் கோடி தன் தானிய ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

மருத்துவ செய்திகள்

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...