உலக நாடுகள் பாராட்டும் ஆபரேஷன் சிந்தூர்

‘எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் ஈடுபடுவது உலகிற்கு அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடந்த எல்லைப் பாதுகாப்புப் படை விழாவில் அமித்ஷா பேசியதாவது: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பயங்கரவாதி முகாம்களை மட்டுமே அழித்தோம். பாகிஸ்தானின் எந்த ராணுவ நிலைகளையும் இந்தியா குறிவைத்து தாக்கவில்லை.உலகம் முழுவதும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பல நாடுகள் பதில் அளித்துள்ளன. பயங்கரவாதிகளுக்கு இந்தியா அளித்த பதில் அவற்றில் மாறுபட்டது.

பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு படையினர் மிகச்சிறந்த முறையில் பதிலடி கொடுத்தனர். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு உலகமே பாராட்டுகிறது. நான் ராணுவ வீரர்களுக்கு தலைவணங்குகிறேன். நமது நாடு பல தசாப்தங்களாக பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதத்தை எதிர்கொண்டு வருகிறது.

பஹல்காமில், பயங்கரவாதிகள் நம் மக்களை கொடூரமாக கொன்றனர். பிரதமர் மோடி தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று கூறினார். அந்த பதில் இன்று தெளிவாகத் தெரிகிறது. முழு உலகமும் இப்போது நமது ஆயுதப் படைகளையும், அவர்களின் தாக்குதல் திறன்களையும் பாராட்டுகிறது.

துல்லியமாக தாக்குதல்
பாகிஸ்தானுக்கு எதிராக துல்லியமாக தாக்குதல் நடத்திய பாதுகாப்பு படை வீரர்களை பாராட்டுகிறேன். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் ஈடுபடுவது உலகிற்கு அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது. பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...