உலகின் 4வது பெரிய பொருளாதார நாடு இந்தியா

உலகின் பெரும் பொருளாதார நாடுகள் பட்டியலில், 2014ல், 10வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது நான்காவது இடத்துக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. நம் நாட்டின் பொருளாதாரம், 4 டிரில்லியன் டாலர், அதாவது, 356 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது.

உலகின் பெரும் பொருளாதார நாடுகளை, அதன், ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில், ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நாணய நிதியம் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது.

கடந்த, 2014ல், இந்த பட்டியலில் நம் நாடு, 10வது இடத்தில் இருந்தது. கடந்த, 2022ல் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட, சர்வதேச நாணய நிதியத்தின், 2025ம் ஆண்டுக்கான உலக பொருளாதார கண்ணோட்டம் அறிக்கையில், இந்த ஆண்டில் இந்தியா, நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், டில்லியில் நேற்று முன்தினம், நிடி ஆயோக் அமைப்பின், 10வது ஆண்டு கூட்டம் நடந்தது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டம் தொடர்பாக, டில்லியில் நேற்று பேசிய, நிடி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர்.சுப்பிரமணியம் கூறியதாவது:

உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய புள்ளி விபரங்களில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனா, ஜெர்மனிக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது. இதுவரை நான்காவது இடத்தில் இருந்த ஜப்பானை முந்தி இந்த நிலையை எட்டியுள்ளோம்.

தற்போதுள்ள நம் பொருளாதார வளர்ச்சி நிலை தொடர்ந்தால், அடுத்த மூன்று ஆண்டுக்குள் ஜெர்மனியை முந்தி, மூன்றாவது இடத்துக்கு முன்னேறுவதற்கு நமக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தற்போதைய நிலையில், ஜெர்மனியின் ஜி.டி.பி., 4.744 டிரில்லியன் டாலராக, அதாவது 403.71 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் புள்ளி விபரங்களின்படி, 2024 – 25ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருந்தது. இரண்டாவது காலாண்டில் 5.8 சதவீதமாக சரிந்தபோதும், மூன்றாவது காலாண்டில் 6.2 சதவீதமாக உயர்ந்தது.

இப்போது நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது 4 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. அதாவது, 356 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. கடந்த, 2014ல் இந்த பட்டியலில், இந்தியா, 10வது இடத்தில் இருந்தது. 2022 செப்டம்பரில் ஐந்தாவது இடத்தை பிடித்தோம். அதன்பின் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால், தற்போது நான்காவது பெரிய பொருளாதாரமாக முன்னேறியுள்ளோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின்படி, 2013 – 14ல் இந்தியாவின் தனிநபர் வருவாய், 1,22,476 ரூபாயாக இருந்தது. இது 2025ல், 2,45,293 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், அந்த அறிக்கையில், 2025 – 26ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 6.2 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இது முந்தைய கணிப்பான, 6.5 சதவீதத்தைவிட சற்று குறைவாகும். உலகளாவிய புவிஅரசியல் மற்றும் பொருளாதார காரணங்கள், வர்த்தகப் போட்டிகள் இதற்கு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ ...

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ.7,200 கோடி திட்டங்கள். பிரதமர் நரேந்திர மோடி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி ஒரு 10 பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்;பிரதமர் மோடி குற்றச்சாட்டு பீஹாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்ப ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி; இந்திய ராணுவம் பெருமிதம் லடாக்கில் சுமார் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் வான் ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உ ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவும் ரூ.24 ஆயிரம் கோடி தன் தானிய ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

மருத்துவ செய்திகள்

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...