தேவையற்ற அறிக்கைகளை தவிருங்கள் – பிரதமர் மோடி அறிவுறுத்தல்

தேவையற்ற அறிக்கைகளைத் தவிர்க்குமாறு டில்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடனான சந்திப்பில் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று (மே 25) தேசிய ஜனநாய கூட்டணி முதல்வர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாய கூட்டணியில் இடம்பெற்றுள்ள 20 மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். அதேபோல், 18 மாநில துணை முதல்வர்களும் பங்கேற்றனர்.

அதேபோல், மத்திய அமைச்சர்கள் நட்டா, ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஆதரவாகவும், ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கு ஆதரவாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. அதேபோல், நக்சலைட்டுகளை ஒழிக்க மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் தேவையற்ற அறிக்கைகளைத் தவிர்க்க வேண்டும். அநாகரிகமான கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.

எங்கும் எதையும் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். மூன்றாம் தரப்பினரின் பேச்சைக் கேட்டு பாகிஸ்தானுடன் போரை நிறுத்தவில்லை. பாகிஸ்தானின் வேண்டுகோளைத் தொடர்ந்து போர் நிறுத்தத்திற்கான முடிவு எடுக்கப்பட்டது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேசம் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த பா.ஜ., தலைவர்கள் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தொடர்ந்து இந்த ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது. கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு முக்கிய அறிவுரைகளை பிரதமர் மோடி வழங்கி உள்ளார் என டில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...