பிரதமரின் தொலைநோக்கு பார்வையால் இந்தியாவுக்கு புதிய அந்தஸ்து

இந்தியா 4வது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது, பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவத்தை வெளிப்படுத்தி உள்ளது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.

நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்பிரமணியம், ஐ.எம்.எப்., தரவுகளை மேற்கோள் காட்டி, உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. 5வது இடத்தில் இருந்த இந்தியா, ஜப்பானை பின்னுக்கு தள்ளி 4வது பெரிய பொருளாதார நாடானது. இந்தியாவின் பொருளாதாரம் இப்போது 4 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி மட்டுமே பெரிய பொருளாதார நாடாக இருக்கின்றன. நாம் உறுதியாக இருந்தால், 3 ஆண்டுகளில், நாம் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருப்போம் என்று கூறியிருந்தார்.

சுப்பிரமணியம் கூறியதை தொடர்ந்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று கூறியதாவது:

உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறுவது, பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவத்தையும் வலுவான பொருளாதார நிர்வாகத்தையும் பிரதிபலிக்கிறது.

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியா 4.2 டிரில்லியன் அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜி.டி.பி) அடைந்து, ஜப்பானை விஞ்சியது, மேலும் 2047ம் ஆண்டுக்கான விக்ஸித் பாரதத்தின் தொலைநோக்குப் பார்வையை அடையும் பாதையில் உள்ளது.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ ...

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ.7,200 கோடி திட்டங்கள். பிரதமர் நரேந்திர மோடி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி ஒரு 10 பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்;பிரதமர் மோடி குற்றச்சாட்டு பீஹாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்ப ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி; இந்திய ராணுவம் பெருமிதம் லடாக்கில் சுமார் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் வான் ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உ ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவும் ரூ.24 ஆயிரம் கோடி தன் தானிய ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

மருத்துவ செய்திகள்

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...