குஜராத்தில் ரயில் இன்ஜின் தயாரிப்பு ஆலையை திறந்து வைத்த பிரதமர் மோடி, அங்கு தயாரிக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் ரயில் இன்ஜின் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, ரூ.82,950 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். இதற்காக, அங்கு சென்றுள்ள அவர் வதோதராவில் ரோடு ஷோ நிகழ்த்தினார்.
அப்போது, சாலையின் இருபக்கங்களிலும் பா.ஜ., தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, கைகளில் தேசிய கொடியை ஏந்தியவாறு, பிரதமர் மீது பூக்களை தூவி தொண்டர்கள் வரவேற்றனர்.
பின்னர், தாஹோத் மாவட்டத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு இந்திய ரயில்வே துறையின், இன்ஜின் தயாரிப்பு ஆலையை திறந்து வைத்தார். மேலும், அந்த ஆலையில் தயாரிக்கப்பட்ட 9 ஆயிரம் ஹெச்.பி. திறன் கொண்ட எலக்ட்ரிக் ரயில் இன்ஜின் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த எலக்ட்ரி ரயில் இன்ஜின்களானது, இந்திய ரயில்வே துறையில் சரக்கு போக்குவரத்தில் முக்கிய பங்காற்றும்.
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |