ரொட்டி சாப்பிட்டு அமைதியாக வாழுங்கள், இல்லை எனில் தோட்டா பாயும்

நீங்கள் உங்களின் ரொட்டியை சாப்பிட்டு நிம்மதியாக இருங்கள். இல்லை என்றால் எங்களின் தோட்டா அங்கே இருக்கும் என்று பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமது சொந்த மாநிலமான குஜராத்திற்கு பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். அங்கு பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். வதோதரா பகுதியில் வாகன பேரணி மேற்கொண்டார்.

தொடர்ந்து பூஜ் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

மே 9ம் தேதி இரவு பாகிஸ்தான் நம் நாட்டு மக்களை குறி வைத்து தாக்க முயன்றது. அதன் பின்னர், இந்திய ராணுவம் சக்திவாய்ந்த ஒரு இரட்டை பலத்துடன் எதிர் தாக்குதலை நடத்தியது.

வறுமையை ஒழிப்பதிலும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். ஆனால், அவர்கள் (பாகிஸ்தான்) இந்தியாவுக்கு எதிரான வெறுப்பை பரப்புவதிலும், தீங்கு ஏற்படுத்துவதிலும் குறியாக உள்ளனர்.

ஆபரேஷன் சிந்தூர் என்பது ஒரு ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல. இந்திய மக்கள் உணர்வுகளின் ஆழமான வெளிப்பாடு. பயங்கரவாத நடவடிக்கைக்கு எதிரான ஒரு பலமான சமிக்ஞை.

பஹல்காம் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் 15 நாட்கள் காத்திருந்தோம். அவர்கள் அவ்வாறு செய்யாத போது, ஆயுதப்படைகளுக்கு முழு சுதந்திரம் அளித்தேன்.

நமது படைகளின் வீரமும், துணிச்சலும் தான் பாகிஸ்தானை வெள்ளைக் கொடியை அசைக்க வைத்தது. எங்கள் இலக்கு என்பது உங்களின் பயங்கரவாத உள்கட்டமைப்பு தான் என்று ஏற்கனவே அவர்களிடம் கூறி இருந்தோம். இப்போது நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள், அதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும்.

பயங்கரவாதம் என்னும் நோயில் இருந்து பாகிஸ்தான் மக்களை விடுவிக்க, அங்குள்ள இளைஞர்கள் முன்வரவேண்டும்.

நீங்கள்(பாகிஸ்தான்) அமைதியான வாழ்க்கையை விரும்பினால் உங்கள் ரொட்டியை சாப்பிடுங்கள். இல்லை என்றால் எங்கள் தோட்டா எப்போதும் தயாராக இருக்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.