பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா

”ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் பாகிஸ்தானுக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. அதில் இருந்து மீண்டு வருவதற்கு பாகிஸ்தானுக்கு நீண்ட நாட்களாகும்,” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, காஷ்மீரில் எல்லைப் பகுதியில் பொது மக்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதில், மக்களின் வீடுகள் சேதம் அடைந்தன.

இந்நிலையில் காஷ்மீர் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்கு பாதுகாப்பு சூழ்நிலை, அமர்நாத் யாத்திரைக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ததுடன், பாகிஸ்தான் அத்துமீறலில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேசினார்.

இதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பாகிஸ்தான் அத்துமீறலுக்கு எல்லை பாதுகாப்புப் படையினர் கடுமையான பதிலடி கொடுத்தனர்.குறுகிய காலத்தில் எதிரிகளின் முகாம்களை சேதப்படுத்தியதுடன், அழித்ததும் குறிப்பிடத்தக்க சாதனை.

எதிரிகளின் கண்காணிப்பு கட்டமைப்பை அழித்தது அவர்களுக்கு பெரிய பின்னடைவு. இதில் இருந்து மீள்வதற்கு பாகிஸ்தானுக்கு நீண்ட நாட்கள் ஆகும். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, நமது எல்லை மற்றும் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு, அதன் 118 முகாம்களை அழித்து எல்லை பாதுகாப்பு படையினர் உறுதியான மற்றும் ஆக்கப்பூர்வமான பதிலடியை கொடுத்தனர்.

அவர்களின் கண்காணிப்பு கட்டமைப்பை தாக்கி அழித்தனர். ஒவ்வொன்றையும் அமைக்க 4 முதல் 5 ஆண்டுகள் ஆகும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப� ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு ...

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

சமூகநீதி எப்படி சாத்தியமாகும் திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி. ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...