நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றியவா் பிரதமா் மோடி

‘காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி ‘ஊழல், முறைகேடு, திருப்திப்படுத்தும் அரசியல்’ எனக் குறிப்பிடப்படும் நிலையில், சிறந்த நிா்வாகம், செயல்பாட்டு அரசியல் என நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றியவா் பிரதமா் நரேந்திர மோடி’ என்று பாஜக தேசிய தலைவரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டா பெருமிதம் தெரிவித்தாா்.

பாஜக தலைமையிலான அரசு மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சிப் பெறுப்பேற்று முதலாம் ஆண்டை நிறைவு செய்த நிலையில் தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் ஜெ.பி.நட்டா அளித்த பேட்டி:

பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 11 ஆண்டு கால ஆட்சியில் நாட்டில் மிகப் பெரிய அளவில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இத் திட்டங்களும், நடவடிக்கைகளும் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டும்.

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி ‘ஊழல், முறைகேடு, திருப்திப்படுத்தும் அரசியல்’ எனக் குறிப்பிடப்படும் நிலையில், சிறந்த நிா்வாகம், செயல்பாட்டு அரசியல் என நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றியவா் பிரதமா் நரேந்திர மோடி.

பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்தும், மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் குறித்தும் ஆதாரமற்ற கேள்விகளை எழுப்பி வருவதன் மூலம், பொறுப்பற்ற எதிா்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி உள்ளாா். அவருக்கு கடவுள் நல்ல அறிவைக் கொடுக்க வேண்டும் என்றாா்.

2024 மக்களவைத் தோ்தலில் தனிப் பெரும்பான்மையை இழந்த நிலையில் பாஜக அரசின் நிலைத்தன்மை குறித்து எதிா்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த நட்டா, ‘பாஜக தலைமையிலான மத்திய அரசு தற்போதைய முழு ஆட்சிக் காலத்தையும் நிறைவு செய்யும் என்பதோடு, அடுத்த முறையும் மத்தியில் ஆட்சியமைக்கும்’ என்றாா்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்பு சட்டப் பிரிவு 370-ஐ நீக்கியது, முத்தலாக் நடைமுறையை ரத்து செய்தது, வக்ஃப் திருத்தச் சட்டம், பண மதிப்பிழப்பு நடவடிக்கை, பெண்கள் இடஒதுக்கீடு மசோதா என துணிச்சலான முடிவுகளை மேற்கொண்டு வலுவான ஆட்சியை பிரதமா் மோடி வழங்கி வருகிறாா்.

2014-ஆம் ஆண்டுக்கு முன்பு, முந்தைய அரசு முழு அளவில் ஊழலில் ஈடுபட்டு வந்ததோடு, நாடு முழுவதும் எதிா்மறை உணா்வு பரவியிருந்தது. ஆனால், 2014-க்குப் பிறகு மக்களின் எண்ணமும், உணா்வும் மாறிவிட்டன. ‘மோடி இருந்தால் இது சாத்தியமே’ என்று மக்கள் பெருமையுடன் கூறுகின்றனா்’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மனதை நொறுங்கச் செய்த நிகழ்வு: ஜ ...

மனதை நொறுங்கச் செய்த நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல் ஆமதாபாத் விமான விபத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் ...

50 வாக்குறுதியைக் கூட நிறைவேற்ற ...

50 வாக்குறுதியைக் கூட நிறைவேற்றாத தி.மு.க.,: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க., அளித்த 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் 50ஐ ...

மகளிரை அவமதிக்கும் தி.மு.க., இனிய ...

மகளிரை அவமதிக்கும் தி.மு.க., இனியாவது திருந்தட்டும்; நயினார் நாகேந்திரன் காட்டம் ''மகளிரை அவமதிக்கும் தி.மு.க., அரசு இனியாவது திருந்தட்டும்'' என ...

அ.தி.மு.க-வுக்கு இணையான தொகுதிகள ...

அ.தி.மு.க-வுக்கு இணையான தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிட வேண்டும்: மோடிக்கு அண்ணாமலை கடிதம் 2026 தேர்தலில் அதிமுக போட்டியிடும் தொகுதி எண்ணிக்கையில் சரிபாதியில் ...

அகமதாபாத் விமான விபத்து – மீட்ப ...

அகமதாபாத் விமான விபத்து – மீட்பு நடவடிக்கையை விரைவுப்படுத்த பிரதமர் மோடி உத்தரவு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அகமதாபாத்திற்கு விரைந்து ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...