தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

கடந்த 2017ம் ஆண்டு, நாகப்பட்டினம் மாவட்டம், உத்தமசோழபுரத்தில் கடல்நீர் உட்புகாமலிருக்க, வெட்டாற்றின் குறுக்கே, கடைமடை தடுப்பணை கட்ட, 49.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டிருந்தது.

தற்போது, தேர்வு செய்யப்பட்ட இடத்தை தவிர்த்து, அதே ஊரில் 2 கி.மீ., மேற்கில், புதிய இடத்தில் அணை கட்டுவதற்கான பணிகளை துவக்கி இருப்பது ஏற்புடையதல்ல.

இதனால், நாகப்பட்டினம் மற்றும் கீழ்வேளூர் தாலுகாக்களைச் சேர்ந்த, 32 கிராமங்களை சுற்றியுள்ள விவசாய நிலங்களின் தன்மை மாறுவதோடு, குடிநீர் உப்புநீராக மாறும் ஆபத்துள்ளது. அப்பகுதி மக்கள் பல போராட்டங்களை நடத்தியும், அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தும், தேர்வு செய்யப்படாத இடத்தில் தடுப்பணை கட்ட, தி.மு.க., அரசு கவனம் செலுத்துவது சரியா?

தி.மு.க., மாவட்ட செயலர் கவுதமிற்கும், அவரது உறவினர்களுக்கும், அந்த ஊரில் நிலம் உள்ளதாகவும், அவர்களின் வசதிக்கேற்ப இந்த மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும் செய்தி உலா வருகிறது.எனவே, மக்கள் நலன் கருதி தடுப்பணையை ஏற்கனவே தேர்வு செய்த இடத்தில் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

மருத்துவ செய்திகள்

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...