குவாட் மாநாடு 2025: பிரதமர் மோடி அழைப்பு.. இந்தியா வருகிறார் அதிபர் டொனால்ட் டிரம்ப்

குவாட் (QUAD) மாநாடு கூட்டத்திற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு வருகை தருவார் என்றத் தகவலை வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி நேற்று (ஜூன் 17, புதன்கிழமை) உறுதிப்படுத்தினார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி டிரம்பிற்கு இந்தியாவுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறினார். டிரம்ப் அழைப்பை ஏற்றுக்கொண்டார், மேலும் அவரது இந்திய வருகை குறித்து அவர் உற்சாகமாக உள்ளார் எனவும் கூறினார்.

இரு தலைவர்களும் 35 நிமிட உரையாடல் நடத்தினர். இரு நாட்டு தலைவர்கள் ஜி7 உச்சிமாநாட்டின் (G7 Summit) போது சந்திக்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்காவிற்கு சீக்கிரமாகத் திரும்ப வேண்டியிருந்தது, இதனால் இந்த சந்திப்பு நடக்கவில்லை என்றும் வெளியுறவுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

அதன் பிறகு, ஜனாதிபதி டிரம்பின் வேண்டுகோளின் பேரில், இன்று இரு தலைவர்களும் தொலைபேசியில் பேசினர். அவர்கள் கிட்டத்தட்ட 35 நிமிடங்கள் பேசினர் என வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, ஜனாதிபதி டிரம்ப் பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசி இரங்கல் தெரிவித்தார். மேலும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆதரவையும் தெரிவித்தார். அதன் பிறகு அவர்கள் பேசுவது இதுவே முதல் முறை. எனவே, பிரதமர் மோடி அதிபர் டிரம்புடன் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விரிவாகப் பேசினார் என்றும் மிஸ்ரி கூறினார்.

டொனால்ட் டிரம்பின் இந்திய வருகையின் போது பல முக்கியமான விஷயங்கள் அவரது நிகழ்ச்சி நிரலில் இருக்க வாய்ப்புள்ளது.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் சேர்ந்து குவாட் அமைப்பை (Quadrilateral Security Dialogue) ஏற்படுத்தியுள்ளன.

கடைசி குவாட் மாநாடு 2024 இல் செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற்றது. அதற்கு முன்னதாக 2023 ஆம் ஆண்டு ஜப்பானின் ஹிரோஷிமாவில் குவாட் மாநாடு நடைபெற்றது

இந்தாண்டுக்கான குவாட் மாநாடு 2025 இந்தியாவில் நடத்தப்படுகிறது. குவாட் 2025 மாநாட்டில் பங்கேற்க இந்தியாவிற்கு வருகை தர உள்ளார் அதிபர் டொனால்ட் டிரம்ப்.

இதுவரை, குவாட் குழுவின் தலைவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் 6 முறை சந்தித்துள்ளனர். இதில் இரண்டு மெய்நிகர் சந்திப்புகள் அடங்கும். குவாட் வெளியுறவு அமைச்சர்கள் எட்டு முறை சந்தித்துள்ளனர். குவாட் நாட்டு பிரதிநிதிகள் அனைத்து மட்டங்களிலும் தொடர்ந்து சந்தித்து ஒருவருக்கொருவர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட் ...

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட்டின் மறுமலர்ச்சி; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் கோவை ஈஷாவில் மஹா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவு ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ராகுல் உருவெடுத்துள்ளார்  மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ ச ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு பிரதமர் நரேந்திர மோடியை, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்தை மக்​கள் நலனுக்​காக பயன்​படுத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

மருத்துவ செய்திகள்

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...