கடவுளை கேலிசெய்துவிட்டு அதை மதச்சார்பின்மை என்பதா?

அநீதியை அழித்ததாலும், அனைவரையும் சமமாக நடத்தியதாலும் உலகின் முதல் புரட்சித்தலைவராக முருகன் உள்ளதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

கடவுளை கேலிசெய்துவிட்டு அதை மதச்சார்பின்மை என சிலர் பேசுவதாகவும், அரேபியாவில் இருந்துவந்த மதம் பற்றி பேச முடியுமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருகன் மாநாடு இன்று (ஜூன் 22) நடைபெற்று வருகிறது.

இதில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டப் பலர் பங்கேற்றுள்ளனர்.

இதில் பவன் கல்யாண் பேசியதாவது,

உலகம் முழுவதும் பரந்து நிறைந் துள்ளார் முருகன். இருந்தாலும் அவர் பாதம் தமிழ்நாட்டில் உள்ளது. அதனால், இந்தமண்ணை வணங்குகிறேன். அந்தக் காரணத்தாலேயே தமிழ்நாட்டில் முருகன்மாநாடு நடக்கிறது.

சிலர் நிறத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்; இந்துமதத்தில் நிறத்தில் எந்த பேதமும் இல்லை. கிருஷ்ணர் கருப்பு, காளியும் கருப்பு.

ஆனால், நிறத்தைவைத்து முருகனை சீண்டி பார்க்கிறது ஒருகூட்டம். கந்த சஷ்டி கவசத்தை சிலர் கிண்டல் செய்கின்றனர். கடவுளை கேலி செய்துவிட்டு அதை மதச்சார்பின்மை என்கின்றனர்.

அரசமைப்பு கொடுத்த சுதந்திரத்தை பயன் படுத்தி இவ்வாறு பேசுகின்றனர். நம்மை காப்பாற்றும் முருகனை நாம்காப்பாற்ற வேண்டும்.

மற்றவர்கள் நம்பிக்கையை கொச்சைபடுத்த அவர்கள் யார்? அவர்களால் மற்றவர்கள் பற்றி இதுபோல பேச முடியுமா? எனது உரிமையை கொண்டாட எனக்கு உரிமை உள்ளது? அதை நீங்கள் கேள்விகேட்கலாமா? அரேபியாவில் இருந்து வந்தமதம் பற்றி பேச முடியுமா?

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...