13 மொழிகளில் மத்திய ஆயுதக் காவல்படை தேர்வு: நயினார் நாகேந்திரன் பெருமிதம்

13 மொழிகளில் மத்திய ஆயுதக் காவல்படை தேர்வு எழுதுவதற்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால் 95 சதவீதம் பேர் அவரவர் தாய்மொழியில் தேர்வு எழுதி பயனடைவர் என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நகேந்திரன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

காங்கிரஸ்-திமுக கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது மத்திய ஆயுதக் காவல்படை(CAPF) தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய இருமொழிகளில் மட்டுமே எழுத முடியும் என்ற நிலை இருந்தது.

அன்று, பல அமைச்சர்களை மத்தியில் வைத்திருந்த திமுக அரசு, எங்கள் தாய் மொழியாம் தமிழ் மொழியில் மத்திய அரசுத் தேர்வுகளை எழுத அனுமதிக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கவில்லை.

ஆனால் தற்போது, நமது பிரதமர் மோடி, தலைமையிலான மத்திய அரசின் கீழ், பல மத்திய அரசுத் தேர்வுகளை 13 மொழிகளில் எழுதுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் சுமார் 95% பேர் அவரவர் தாய்மொழிகளில் தேர்வுகளை எழுதுகின்றனர் என்பது இமாலய சாதனை.

நாட்டின் கடைக்கோடி கிராமத்தில் உள்ளவர்களும் மத்திய அரசுப் பணிகளில் சேர்வதற்கான கதவுகள் இதனால் திறக்கும்.

இத்தகைய செயல்களால், யார் உண்மையான மொழிக்காவலர்கள், யார் மொழியை வைத்து அரசியல் மட்டும் செய்பவர்கள் என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டதை என்னால் நிச்சயமாக உணரமுடிகிறது.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...