விண்வெளியில் இருக்கும் சுபான்ஷு சுக்லாவுடன் உரையாடிய பிரதமர் மோடி

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடியுள்ளார். சுபான்ஷு சுக்லாவின் உடல் நலம், விண்வெளி பணிகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார்.

அமெரிக்காவின் டிராகன் விண்கலம் வாயிலாக 4 பேர் குழுவில் ஒருவராக விண்வெளி பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்தில் நுழைந்த முதல் இந்தியர் என்ற வரலாற்றை படைத்துள்ளார்.

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் ஆக்ஸியம் – 4 என்ற திட்டத்தின் கீழ் 4 பேர் கொண்ட குழு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல திட்டமிடப்பட்டது. இந்த ஆக்சியம் திட்டம் 6 முறை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த ஜூன் 25 ஆம் தேதி பிற்பகல் 12.01 மணியளவில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் ‘டிராகன்’ விண்கலம் விண்ணில் பாய்ந்தது.

இந்த விண்கலத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என 4 பேர் பயணம் செய்தனர். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (ISRO) வீரர் சுபான்ஷு சுக்லா (39) இந்த பயண திட்டம் மூலம் விண்வெளிக்கு சென்றார். சுமார் 28 மணிநேர பயணத்துக்குப் பின்னர் 400 கி.மீ. தொலைவில் புவியின் சுற்றுவட்டப் பாதையில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துடன் டிராகன் விண்கலம் கடந்த ஜூன் 26 ஆம் தேதி மாலை 4 மணியளவில் இணைந்தது.

40 ஆண்டுகளுக்கு பின் சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற முதல் வீரர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றுள்ளார். விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ள சுபான்ஷு சுக்லா குழுவினர் 14 நாட்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். இந்தக் குழுவினர் 60 பரிசோதனைகளை செய்ய திட்டமிட்டுள்ளனர். அவற்றில் 7 பரிசோதனைகளுக்கு சுபான்ஷு சுக்லா தலைமை தாங்குகிறார்.

இந்த நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாடி உள்ளார். சுபான்ஷு சுக்லாவின் உடல் நலம், விண்வெளி பணிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக டிராகன் விண்கலத்திலிருந்து சக விண்வெளி வீரர்களுடன் நேரடியாகப் பேசிய சுபான்ஷு சுக்லா, “விண்வெளியில் நுழைந்த பிறகு உடல்நிலை நன்றாக இருப்பதாக உணரவில்லை. அதன் பிறகு நுண் ஈர்ப்பு விசைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளத் தொடங்கியிருக்கிறேன். எப்படி சாப்பிடுவது, எப்படி நடப்பது என ஒவ்வொரு விஷயத்தையும் குழந்தை போல் கற்றுக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...