பயங்கரவாதம் மனிதகுலத்தின் எதிரி – பிரதமர் மோடி

டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், பயங்கரவாதத்திற்கு எதிரான தங்களின் போராட்டத்தில் துணை நின்றதற்காக அந்நாட்டு மக்களுக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்தியாவும், டிரினிடாட் அண்ட் டொபாகோவும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், மோதல்கள் பெருகி வரும் இந்த காலத்தில், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை அவசியமானது எனவும் கூறினார்.

அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அதிகளவில் பெண்கள் உள்ளதற்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி, பெண்கள் மீதான மரியாதை என்பது இந்திய கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றிய ஒன்று என குறிப்பிட்டார்.

விண்வெளி முதல் விளையாட்டு வரை பல துறைகளில் இந்தியாவை புதிய எதிர்காலத்தை நோக்கி பெண்கள் வழிநடத்தி செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

டிரினிடாட் மற்றும் டொபாகோ பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி அர்ஜென்டினா புறப்பட்டு சென்றார். 2018ஆம் ஆண்டுக்கு பிறகு 2ஆவது முறையாக அவர் அர்ஜென்டினா செல்கிறார். அங்கு அந்நாட்டு அதிபர் ஜாவிர் மெய்லியை சந்திக்கும் மோடி, பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...