“பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை விதிப்பதில் எந்த தயக்கமும் கூடாது” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி

பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்த்து போராட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் உச்சி மாநாடு நேற்றுத் தொடங்கியது. இதில் சர்வதேச அளவிலான அமைதி, பாதுகாப்பு மற்றும் நிர்வாகம் குறித்த சிறப்பு கூட்டம் நடைபெற்றது. குறிப்பாக, பிரிக்ஸ் நாடுகளின் மீது அமெரிக்கா அதிக வரி விதித்திருப்பது குறித்து இதில் விவாதிக்கப்படவுள்ளது. இம்மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடியை உலக நாடுகளின் தலைவர்கள் வரவேற்றனர்.

இம்மாநாட்டில் அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த விவாதத்தின்போது பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதத்திற்கு எதிராக பொருளாதார தடைகளை விதிப்பதில் எந்த தயக்கமும் கூடாது என்றும், அதேபோல் பாதிக்கப்பட்டவர்களையும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருப்பவர்களையும் ஒரே தராசில் எடை போடக்கூடாது என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் பேசியபோது, “பஹெல்காமில் நடத்தப்பட்ட தாக்குதல் கொடூரமானது. அதேசமயம் கோழைத்தனமானது. இந்தியாவின் அடையாளம் மற்றும் கண்ணியத்தின் மீதான நேரடி தாக்குதல் அது. உலகம் எதிர்கொள்ளும் மிகவும் மோசமான சவால் பயங்கரவாதம். ஏப்ரல் 22ஆம் தேதியன்று பஹெல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலானது இந்தியா மீதானது மட்டுமல்ல; ஒட்டு மொத்த மனித குலத்தின்மீது விழுந்த அடி.

எனவே பயங்கரவாத்தை கண்டிப்பதே நமது கொள்கையாக இருக்கவேண்டும். இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடந்த மோதலின்போது பாகிஸ்தானுக்கு சீனா நேரடியாக ஆதரவு அளித்தது. பயங்கரவாதிகளுக்கு எதிராக தடை விதிப்பதில் எந்த தயக்கமும் காட்டக்கூடாது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களையும், அதற்கு ஆதரவு அளிப்பவர்களையும் ஒரே தராசில் எடைபோட முடியாது.

தனிப்பட்ட அல்லது அரசியல் ஆதாயங்களுக்காக, மறைமுகமாக பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நாம் தீவிரம் காட்டுகிறோமா என்பது தற்போதும் விடை தெரியாத கேள்வியாகவே தொடர்கிறது. அமைதியான, பாதுகாப்பான சூழலில்தான் வளர்ச்சி சாத்தியமாகும். இதற்கு பிரிக்ஸ் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்” என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய மோடி, காசாவின் நிலைமை கவலையளிப்பதாக வருத்தம் தெரிவித்தார். மேலும் எவ்வளவு கடினமான சூழ்நிலை நிலவினாலும் மக்களின் நன்மைக்கு ஒரே வழி என்றால் அது அமைதிப்பாதை என்பதை இந்தியா உறுதியாக நம்புகிறது என்றும் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...