இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் மையமாக கல்வி இருக்க வேண்டும் என்று அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்

நமது நாடு வளர்ச்சியடைந்து வரும் நிலையில், நமது முதன்மைக் கவனம் கல்வியாக இருக்க வேண்டும் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். சமூக மேம்பாட்டு மன்றம் ஏற்பாடு செய்திருந்த “இந்தியாவில் பள்ளிக்கல்வி: அனைவருக்கும் சமமான, தரமான கல்வி கிடைப்பதை நோக்கி” என்ற கருத்தரங்கில் உரையாற்றிய அவர், நான்கு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தில் இருந்து 2047-க்குள் 35 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்பதை நோக்கிய இந்தியாவின் வளர்ச்சிப் பயணமானது அனைவருக்கும், உயர்தரமான, அனைவரையும் உள்ளடக்கிய கல்வியின் மூலம் பொறுப்பான, உற்பத்தி சார்ந்த குடிமக்கள் என்ற தலைமுறையை வளர்ப்பதைச் சார்ந்தே உள்ளது என்றார்.

2002-ம் ஆண்டில் வாஜ்பாய் அரசு காலத்தில் அரசியல் சட்டத்தின் 86-வது திருத்தத்தின் மூலம் கல்வி அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மாறியது. இதன்படி, 6 முதல் 14 வயது வரை உள்ள அனைவருக்கும் கட்டணமின்றி கட்டாயக் கல்வி உறுதி செய்யப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சீர்திருத்தம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிக்காலத்தில் மேலும் வலுப்பெற்றுள்ளது என்று திரு பூரி கூறினார்.

கல்வி என்பது நாட்டின் வளர்ச்சி விருப்பங்களை நேரடியாக வடிவமைப்பதால் அதனை நாட்டின் முன்னுரிமையாகவும், மாற்றத்தை ஏற்படுத்தும் அரசியல் கோட்பாடாகவும் பார்க்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.

இந்தியாவின் ஒவ்வொரு குழந்தைக்கும் சமமான, தரமான கல்வியை உறுதி செய்ய வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட பேராசிரியர் முச்குந்த் துபே பெயரில் சமூக மேம்பாட்டிற்கான மன்றத்தில் கல்வி உரிமைக்கான மையம் அமைக்கப்பட்டிருப்பதற்கு நன்றி தெரிவித்த அமைச்சர், இதில், முதலாவது நிகழ்வை தொடங்கிவைக்கும் வாய்ப்பு தமக்கு கிடைத்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2144832

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மருத்துவ செய்திகள்

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...