இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் மையமாக கல்வி இருக்க வேண்டும் என்று அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்

நமது நாடு வளர்ச்சியடைந்து வரும் நிலையில், நமது முதன்மைக் கவனம் கல்வியாக இருக்க வேண்டும் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். சமூக மேம்பாட்டு மன்றம் ஏற்பாடு செய்திருந்த “இந்தியாவில் பள்ளிக்கல்வி: அனைவருக்கும் சமமான, தரமான கல்வி கிடைப்பதை நோக்கி” என்ற கருத்தரங்கில் உரையாற்றிய அவர், நான்கு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தில் இருந்து 2047-க்குள் 35 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்பதை நோக்கிய இந்தியாவின் வளர்ச்சிப் பயணமானது அனைவருக்கும், உயர்தரமான, அனைவரையும் உள்ளடக்கிய கல்வியின் மூலம் பொறுப்பான, உற்பத்தி சார்ந்த குடிமக்கள் என்ற தலைமுறையை வளர்ப்பதைச் சார்ந்தே உள்ளது என்றார்.

2002-ம் ஆண்டில் வாஜ்பாய் அரசு காலத்தில் அரசியல் சட்டத்தின் 86-வது திருத்தத்தின் மூலம் கல்வி அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மாறியது. இதன்படி, 6 முதல் 14 வயது வரை உள்ள அனைவருக்கும் கட்டணமின்றி கட்டாயக் கல்வி உறுதி செய்யப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சீர்திருத்தம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிக்காலத்தில் மேலும் வலுப்பெற்றுள்ளது என்று திரு பூரி கூறினார்.

கல்வி என்பது நாட்டின் வளர்ச்சி விருப்பங்களை நேரடியாக வடிவமைப்பதால் அதனை நாட்டின் முன்னுரிமையாகவும், மாற்றத்தை ஏற்படுத்தும் அரசியல் கோட்பாடாகவும் பார்க்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.

இந்தியாவின் ஒவ்வொரு குழந்தைக்கும் சமமான, தரமான கல்வியை உறுதி செய்ய வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட பேராசிரியர் முச்குந்த் துபே பெயரில் சமூக மேம்பாட்டிற்கான மன்றத்தில் கல்வி உரிமைக்கான மையம் அமைக்கப்பட்டிருப்பதற்கு நன்றி தெரிவித்த அமைச்சர், இதில், முதலாவது நிகழ்வை தொடங்கிவைக்கும் வாய்ப்பு தமக்கு கிடைத்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2144832

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...