பகுதி நேர ஆசிரியர் போராட்டம்: நயினார் நாகேந்திரன் ஆதரவு

‘தேர்தல் நேரத்தில், நேரில் சென்று ஆசிரியர்களுக்கு ஆதரவு அளிப்பதும், ஆட்சி கட்டிலில் ஏறியதும், அதிகாரிகளை பேச விட்டு, தி.மு.க., அரசு அலட்சியத்துடன் அமர்ந்திருப்பதும் நியாயமா?’ என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தொடர்ந்து, எட்டு நாட்களாக பகுதி நேர ஆசிரியர்கள், பணி நிரந்தம் கோரி போராடி வரும் நிலையில், அவர்களின் கோரிக்கைகளை தி.மு.க., அரசு கண்டுகொள்ளாது அலட்சியம் காட்டுவதுடன், கைது செய்து வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டனத்திற்கு உரியது.

பணி நிரந்தரம் செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோருவது தவறா?

தேர்தல் நேரத்தில் மட்டும், நேரில் சென்று ஆசிரியர்களுக்கு ஆதரவு அளிப்பதும், ஆட்சி கட்டிலில் ஏறியதும், அதிகாரிகளை பேச விட்டு, அலட்சியத்துடன் அமர்ந்திருப்பதும் நியாயமா? தங்கள் உரிமைக்காக எவ்வளவு காலம் வேண்டுமானாலும், ஆசிரியர்கள் போராடட்டும் என, அலைக்கழிப்பதால், அரசு பள்ளி மாணவர்களின் நலனும் பாதிக்கப்படும் எனும் அடிப்படை உண்மையை கூட உணர இயலாதா?

ஆசிரியர்கள், மாணவர்கள் என, அனைவரையும் வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசு. ‘நாடு போற்றும் நல்லாட்சி’ என்று விளம்பரம் செய்வதை விட்டுவிட்டு, உடனே பகுதி நேர ஆசிரியர்கள், மாணவர்களின் நலனை காக்கும் பொருட்டு, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

இல்லையெனில், ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக, இன்று, போராட்ட களத்தில் இருப்போருக்கு தமிழக பா.ஜ., துணை நிற்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

மருத்துவ செய்திகள்

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...