ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு

விவசாயிகளுக்கு உதவும் ரூ.24 ஆயிரம் கோடி தன் தானிய யோஜனா திட்டத்திற்கு, இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.v

இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

இந்த திட்டம், 2025-26 முதல் 6 ஆண்டு காலத்திற்கு, ஆண்டுக்கு ரூ.24,000 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

முதற்கட்டமாக நாட்டின் 100 மாவட்டங்களில் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் விரைவான வளர்ச்சியை அடைவதே இந்த திட்டத்தின் நோக்கம்.

2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், லட்சிய மாவட்டங்கள் திட்டத்தின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டது. விவசாய உற்பத்தித்திறன், பயிர் பல்வகைப்படுத்தல், நீர்ப்பாசனம் மற்றும் கடன் கிடைக்கும் தன்மையை மேம்படுத்த, 11 அமைச்சகங்களின் 36 திட்டங்களை ஒன்றிணைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் குறைந்த உற்பத்தித்திறன், மிதமான பயிர் அடர்த்தி மற்றும் சராசரிக்கும் குறைவான கடன் அணுகல் ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் குறைந்தது ஒரு மாவட்டமாவது தேர்ந்தெடுக்கப்படும்.

மாநிலத் திட்டங்கள் மற்றும் தனியார் துறையுடன் கூட்டாண்மை மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்தத் திட்டம் நாடு முழுவதும் 1.7 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்காக மாவட்டம், மாநில மற்றும் தேசிய அளவில் குழுக்கள் அமைக்கப்படும்.

அதே நேரத்தில் கள வருகைகள், மதிப்பாய்வுகள் மற்றும் கண்காணிப்புக்காக மத்திய அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.