டி.ஆர்.எப். மீதான அமெரிக்க நடவடிக்கைக்கு இந்தியா பாராட்டு; வலுவான ஒத்துழைப்பு என வரவேற்பு

டி.ஆர்.எப்.,க்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை, இரு நாடுகளின் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை வலுவாக உறுதிப்படுத்துகிறது என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறி உள்ளார்.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பஹல்காம் தாக்குதலைத தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்(The resistance Front) எனப்படும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த அமைப்பானது, பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் கிளை அமைப்பாகும்.

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் அழுத்தம் காரணமாக, தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட் அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு, அந்த அமைப்பினர் சர்வதேச பயங்கரவாதிகள் என்று அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

டி.ஆர்.எப். அமைப்புக்கு எதிரான இந்த நடவடிக்கை பயங்கரவாத இயக்கங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக கருதப்படுகிறது. இந் நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை இந்தியா அதிகாரப்பூர்வமாக வரவேற்று இருக்கிறது.

இந்த நடவடிக்கையானது, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இந்தியா, அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பு வலுவாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது.

ஏப்.22ம் தேதி நிகழ்ந்த பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற டி.ஆர்.எப்., அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவித்த அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவை பாராட்டுகிறோம். பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ளவே முடியாது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

மருத்துவ செய்திகள்

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...