சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய பாதுகாப்பு: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ

நம் நாடு ஒரு மதச்சார்பற்ற நாடு, இங்கு சிறுபான்மையினர் மிகவும் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்று மத்திய சிறுபான்மைத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறினார்.

இது தொடர்பாக கிரண் ரிஜிஜூ அளித்த பேட்டி:

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இந்த நாட்டில் சிறுபான்மையினர் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். பெரும்பான்மையினரின் சுதந்திரமும் பாதுகாப்பும் சிறுபான்மையினருக்குக் கிடைக்கிறது.

சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், நாட்டை விட்டு வெளியேறியதாக, இதுவரை நான் பார்த்ததில்லை.

காங்கிரஸ் கட்சியால் ஆதரிக்கப்படும் இடதுசாரிகள் தான், சிறுபான்மையினர் சித்திரவதை செய்யப்படுகிறார்கள், படுகொலை செய்யப்படுகிறார்கள், அடித்துக் கொல்லப்படுகிறார்கள், இந்தியாவில் பாதுகாப்பாக இல்லை என்று தொடர்ந்து பிரசாரம் நடத்தி வருகின்றனர். அது கண்டிக்கத்தக்கது.

ஒருவர் சிறுபான்மையினராக இருந்தாலும் சரி, பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, சட்டத்தின் முன் அனைவரும் சமம். பெரும்பான்மை சமூகம் எதைப் பெற்றாலும், சிறுபான்மை சமூகங்களும் அதைப் பெறுகின்றன. ஆனால் சிறுபான்மையினர் பெறும் சில விஷயங்கள், பெரும்பான்மை சமூகத்திற்கு கிடைக்காது. இன்று, ஒவ்வொரு பழங்குடி சமூகமும், ஒவ்வொரு சிறுபான்மை சமூகமும் தங்கள் சொந்த நாட்டில் பாதுகாப்பாக உள்ளது, ஏனெனில் பெரும்பான்மை ஹிந்து சமூகம் மதச்சார்பற்றதாகவும், இயற்கையாக சகிப்புத்தன்மையோடு இருக்கிறது.அதனால்தான் இந்தியா ஒவ்வொரு சிறுபான்மை சமூகத்திற்கும் விருப்பமான இடமாக உள்ளது. இதை நாம் பாராட்ட வேண்டும்.

இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...